Aug 11, 2026
Thisaigal NewsYouTube
இந்திய – பாகிஸ்தான் போரை தடுத்து நிறுத்தக் களம் இறங்குகிறது அமெரிக்கா
உலகச் செய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போரை தடுத்து நிறுத்தக் களம் இறங்குகிறது அமெரிக்கா

Share:

புதுடெல்லி, மே.10-

இந்தியாவிற்கும் - பாகிஸ்தானுக்கும் இடையிலான போரைத் தடுத்து நிறுத்த உதவி செய்யத் தயார் என்று அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது.

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலைத் தணிப்பதற்குத் தேவையான வழியை இந்தியா கண்டறிய வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

காஷ்மீர், பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் மாறி, மாறித் தாக்கி வருகின்றன. குறிப்பாக, பாகிஸ்தான் ராணுவத் தளவாடங்கள் மீது இந்தியா தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளது.

இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்தி, எல்லையில் அமைதியை உறுதிச் செய்ய வேண்டும் என்று அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ருபியோ, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் அவசரமாகத் தொலைபேசியில் பேசியுள்ளார்.

போர் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டைக் கேட்டறிந்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் பிரச்னைகளைச் சரி செய்து, அமைதியை நிலை நாட்டுவதற்குத் தேவையான உதவிகளை செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாக மார்கோ ருபியோ கூறினார்.

முன்னதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ருபியோ, பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனிருடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றமானச் சூழலைத் தவிர்க்கத் தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ருபியோ, தம்மிடம் பேசியதை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று பிற்பகலில் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related News

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 164 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 164 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

பாங்காக் பள்ளி துப்பாக்கிச் சூடு: குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் துப்பாக்கி பயன்பாட்டில் முன்பே ஆர்வம்

பாங்காக் பள்ளி துப்பாக்கிச் சூடு: குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் துப்பாக்கி பயன்பாட்டில் முன்பே ஆர்வம்

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்:  பணத்தை பாதுகாக்க சென்ற  2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்: பணத்தை பாதுகாக்க சென்ற 2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு

ஜப்பானை உலுக்கும் கடும் வெப்பம்: தோக்கியோ மிருகக்காட்சிசாலையில் 3 சிங்கங்கள் பரிதாப பலி; 43,000 பேர் பாதிப்பு

ஜப்பானை உலுக்கும் கடும் வெப்பம்: தோக்கியோ மிருகக்காட்சிசாலையில் 3 சிங்கங்கள் பரிதாப பலி; 43,000 பேர் பாதிப்பு

நடிகை திரிஷா குறித்து அவதூறு பேச்சு: உதயநிதி ஸ்டாலின் இல்லத்தில் அதிரடி கைது

நடிகை திரிஷா குறித்து அவதூறு பேச்சு: உதயநிதி ஸ்டாலின் இல்லத்தில் அதிரடி கைது

இந்திய – பாகிஸ்தான் போரை தடுத்து நிறுத்தக் களம் இறங்குகிற... | Thisaigal News