Jun 17, 2026
Thisaigal NewsYouTube
குற்றத்தை ஒப்பினார் மலேசிய சொத்துடைமை கோடீஸ்வரர்
உலகச் செய்திகள்

குற்றத்தை ஒப்பினார் மலேசிய சொத்துடைமை கோடீஸ்வரர்

Share:

சிங்கப்பூர், ஆகஸ்ட்.04-

சிங்கப்பூர் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தொடர்புடைய வழக்கில் விசாரணைக்கு இடையூறு விளைவித்த குற்றத்தை மலேசிய சொத்துடைமை கோடீஸ்வரர் ஓங் பெங் செங், சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இன்று ஒப்புக் கொண்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனின் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கட்டார் பயணம் தொடர்பான விசாரணைக்கு இடையூறு விளைவித்ததை சிங்கப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி லீ லிட் செங் முன்னிலையில் ஓங் பெங் செங் ஒப்புக் கொண்டார்.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தம்முடன் கட்டாருக்குப் பயணம் மேற்கொள்ள சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் என்ற முறையில் ஈஸ்வரனுக்கு ஓங் பெங் செங் அழைப்பு விடுத்ததாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

அமைச்சர் ஈஸ்வரன் தமது விருந்தினர் என்றும், தம்முடன் தமக்குச் சொந்தமான விமானத்தில் கட்டாருக்குச் செல்லலாம் என்றும் ஓங் பெங் செங் கூறியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தங்குமிடம் உட்பட பயணச் செலவுகள் அனைத்தையும் தாம் ஏற்றுக் கொள்வதாக ஈஸ்வரனிடம் ஓங் பெங் செங் தெரிவித்துள்ளார். அவரின் அழைப்பை அமைச்சர் ஈஸ்வரன் ஏற்றுள்ளார். பயணத்துக்காக ஈஸ்வரன் அவசர விடுப்புக்கு விண்ணப்பம் செய்தார்.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் தேதியன்று ஓங்கிற்குச் சொந்தமான விமானத்தில் ஈஸ்வரன், கட்டார் தலைநகர் டோஹாவிற்குப் பயணம் செய்தார். டோஹாவில் ஈஸ்வரன் ஆடம்பரத் தங்கும் விடுதியான ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலில் தங்கினார். அங்கு ஓர் இரவுக்கான ஹோட்டல் அறைச் செலவு 4 ஆயிரத்து 737 சிங்கப்பூர் டாலராகும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

குற்றத்தை ஒப்பினார் மலேசிய சொத்துடைமை கோடீஸ்வரர் | Thisaigal News