Jun 18, 2026
Thisaigal NewsYouTube
இந்தியா நாடளுமன்ற தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கின
உலகச் செய்திகள்

இந்தியா நாடளுமன்ற தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கின

Share:

இந்தியா, ஜூன் 04-

இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கக்கூடிய அரசாங்கத்தை தேர்வுசெய்யக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கின.

அந்நாட்டிலுள்ள மொத்தம் 543 நாடாளுமன்றத் தொகுதிகளில், ஆட்சியைப் பிடிப்பதற்கு, 272 இடங்கள் மட்டுமே தேவைப்படுகின்றது.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெற, எதிர்க்கட்சி தரப்பினர், மொத்த இடங்களின் எண்ணிக்கையில் 10 சதவீதம் அதாவது 55 இடங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். எனவே, வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்குவதற்கு முன்பாகவே பாஜக கூட்டணிக்கு ஓர் இடம் கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இம்முறை காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி, இந்திய அரசாங்கத்தைக் கைப்பற்றுமா? அல்லது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் 3ஆம் தவணைக்கு தொடருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related News

மகனின் உடலை எழுப்ப முயன்ற தந்தையின் நெஞ்சையுருக்கும் பாசம்

மகனின் உடலை எழுப்ப முயன்ற தந்தையின் நெஞ்சையுருக்கும் பாசம்

உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்க்கச் சீனா விடுத்த அழைப்புக்குத் தைவான் கடும் எதிர்ப்பு

உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்க்கச் சீனா விடுத்த அழைப்புக்குத் தைவான் கடும் எதிர்ப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்