கோலாலம்பூர், ஜனவரி.06-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கி, 8 ஆம் தேதி வரை துருக்கி (Turkiye) நாட்டிற்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
மலேசியாவிற்கும் துருக்கிற்கும் இடையில் இருவழிப் பயணத்தை வலுப்படுத்தும் நோக்கில் மலேசியப் பேராளர்கள் குழுவிற்குத் தலைமையேற்று அன்வார் துருக்கி சென்றுள்ளார். டத்தோ ஶ்ரீ அன்வாருடன் அவரின் துணைவியார் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயிலும் உடன் சென்றுள்ளார்.
இப்பயணத்தின் போது பிரதமர், Recep Tayyip Erdogan சந்தித்து, இரு தரப்பு உறவுகள் மற்றும் வியூகக் கூட்டாண்மை குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








