Jun 17, 2026
Thisaigal NewsYouTube
பஞ்சாப்பில் பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் பலி, 30 பேர் காயம்
உலகச் செய்திகள்

பஞ்சாப்பில் பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் பலி, 30 பேர் காயம்

Share:

சண்டிகர், ஜூலை.07-

பஞ்சாபில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர். பஞ்சாப் மாநிலம், ஹோஷியார்பூர் மாவட்டம் ஹாஜிபூர் சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்தது. தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் உள்ளூர் மக்களின் உதவியுடன் நீண்ட நேரம் போராடி மீட்பு பணியை மேற்கொண்டனர்.

விபத்தில் எண்மர் பலியாயினர். படுகாயமுற்ற 30 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில் பேருந்தை அதி விரைவாக இயக்கியதால், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது என்பது தெரிய வந்துள்ளது.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை