அமெரிக்காவில், டென்னசி மாகாணம் எலிசபெத்டானில் இருந்து புறப்பட்டு லாங் தீவின் மாக்ஆர்தர் விமான நிலையத்தை நோக்கி சென்ற விமானம், திடீரென தலைநகர் வாஷிங்டன் நோக்கி பறந்தது.
ரேடியோ சாதனம் மூலம் தொடர்பு கொண்டும் எந்த பதிலும் அளிக்கவில்லை. அமெரிக்க ராணுவம், போர் விமானத்தை கொண்டு, அந்த விமானத்தை மறித்து வழிக்கு கொண்டுவர முயன்ற போது, தாறுமாறாக பறந்த விமானம், விர்ஜினியா மாகாணம் மான்டேபெலோ அருகே மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. மீட்புப்படையினர் அந்த இடத்தை அடைவதற்கு 4 மணி நேரம் ஆன நிலையில், அவ்விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்தனர், ஏன் கீழ்ப்படியாமல் சென்றது என்பது குறித்து ஒரு தகவலும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

இந்தியாவில் தொடர் மாணவர் போராட்டங்களால் கல்வி அமைச்சர் ராஜிநாமா

நேட்டோ அமைப்பு நிறுவனத்தில் உளவாளியாகச் செயல்பட்ட சந்தேகத்தின் பேரில் நபர் கைது

சீனாவில் நவுல் புயல் எச்சரிக்கை: ரயில்கள் மற்றும் பள்ளிகள் முடக்கம்

ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் அருங்காட்சியகம்: டிரம்ப் புதிய உத்தரவு


