அமெரிக்காவில், டென்னசி மாகாணம் எலிசபெத்டானில் இருந்து புறப்பட்டு லாங் தீவின் மாக்ஆர்தர் விமான நிலையத்தை நோக்கி சென்ற விமானம், திடீரென தலைநகர் வாஷிங்டன் நோக்கி பறந்தது.
ரேடியோ சாதனம் மூலம் தொடர்பு கொண்டும் எந்த பதிலும் அளிக்கவில்லை. அமெரிக்க ராணுவம், போர் விமானத்தை கொண்டு, அந்த விமானத்தை மறித்து வழிக்கு கொண்டுவர முயன்ற போது, தாறுமாறாக பறந்த விமானம், விர்ஜினியா மாகாணம் மான்டேபெலோ அருகே மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. மீட்புப்படையினர் அந்த இடத்தை அடைவதற்கு 4 மணி நேரம் ஆன நிலையில், அவ்விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்தனர், ஏன் கீழ்ப்படியாமல் சென்றது என்பது குறித்து ஒரு தகவலும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

இந்தோனேசியாவில் எரிமலை குமுறியது

சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்: பின் தங்கியது அமெரிக்கா

இந்தோனேசியாவில் செம்பனை எண்ணெயுடன் வந்த கப்பலில் தீ: 10 பேர் பலி

வங்காளதேசத்தில் ரசாயனக் கிடங்கில் தீ: 16 பேர் உயிரிழந்தனர்

ராஜஸ்தானில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 10 பேர் மரணம்
