Jan 16, 2026
Thisaigal NewsYouTube
யார் இந்த நிகேஷ் அரோரா? சுந்தர் பிச்சை கூட நெருங்க முடியாது. இவரோட சம்பளம் எவ்ளோ தெரியுமா?
உலகச் செய்திகள்

யார் இந்த நிகேஷ் அரோரா? சுந்தர் பிச்சை கூட நெருங்க முடியாது. இவரோட சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Share:

இந்தியா, ஜுன் 29-

அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கும் பத்து தலைமை நிர்வாக அதிகாரிகளின் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரே சி.இ.ஓ. நிகேஷ் அரோரா தான்.

உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிக வருமானம் ஈட்டும் தலைமை நிர்வாக அதிகாரிகள் பட்டியல் வெளியாகியுள்ளது. C-Suite Comp வெளியிட்டுள்ள இந்த டாப் டென் பட்டியலில் ஒரே ஒரு இந்திய வம்சாவளி சி.இ.ஓ. மட்டுமே உள்ளார். இவர் மைக்ரோசாப்ட் சி.இ.ஓ. சத்யா நாதெல்லாவோ அல்லது கூகிளின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையோ இல்லை.

பாலோ ஆல்டோ நெட்வொர்க்கின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான நிகேஷ் அரோரா தான் அந்த டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கும் பத்து தலைமை நிர்வாக அதிகாரிகளின் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரே சி.இ.ஓ. அவர்தான்.

சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால் இந்தப் பட்டியலில் சுந்தர் பிச்சையோ சத்யா நாதெல்லாவோ இடம்பெறவே இல்லை. நிகேஷ் அரோராவின் பெற்றுள்ள CAP இழப்பீடு 2023 இல் 151.4 மில்லியன் டாலருக்கும் அதிகம் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவர் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளார். ஆனால், உண்மையில் அவர் ஈட்டியது 266.4 மில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

நிகேஷ் அரோரா டெல்லியின் ஏர்ஃபோர்ஸ் பப்ளிக் பள்ளியின் முன்னாள் மாணவர். கூகுளின் தலைமை வணிக அதிகாரியாகவும் பணியாற்றியவர். 2014 இல் கூகுள் நிறுவன வேலையை விட்டு வெளியேறிய பிறகு, ஜப்பானில் சாஃப்ட் பேங்கில் பணிபுரிந்தார். 2018 முதல் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான பாலோ ஆல்டோ (Palo Alto Networks) நெட்வொர்க்ஸில் சி.இ.ஓ.வாக பணியாற்றி வருகிறார்.

2023ல் 1.4 பில்லியன் டாலருக்கு மேல் சம்பாதித்த டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். பலன்டிர் டெக்னாலஜிஸின் அலெக்சாண்டர் கார்ப் 1.1 பில்லியன் டாலருக்கு மேல் சம்பாதித்துள்ளார்.

Related News