Jun 17, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூரில் தமிழை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும்-  அமைச்சர் சண்முகம்
உலகச் செய்திகள்

சிங்கப்பூரில் தமிழை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும்- அமைச்சர் சண்முகம்

Share:

சிங்கப்பூர், மே.24-

அடுத்த தலைமுறையினர், சிங்கப்பூரில் தமிழை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்று, அந்நாட்டு அமைச்சர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழிச் சங்கம் நடத்திய நிகழ்வின்போது அவர் இதனைத் தெரிவித்தார். அடுத்த 20, 30 ஆண்டுகளில், தன்னைப் போல இயல்பாக மேடையில் தமிழ் பேசக் கூடிய ஒரு அமைச்சர் இருப்பாரா என்ற கேள்வியை, நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்த தலைமுறையினர் அடுத்த 50 ஆண்டுகளுக்கு சிங்கப்பூரில் தமிழை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும். இன்று ஆங்கிலத்தில் பேசுவதை பலர் உயர்வாகக் கருதுகின்றனர். இதன் காரணமாக தமிழ் பயன்பாட்டில் சரிவு ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூரில் நடைமுறையில் உள்ள நான்கு அதிகாரப்பூர்வ மொழிகளில் தமிழ் ஒன்றாகும். எனினும் தமிழைப் பேசாதவர்களால் அது தொடர்ந்து மதிக்கப்படும் மொழியாக இருக்கும் என்பதை எதிர்பார்க்க முடியுமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

1960- 1970ம் ஆண்டுகளில் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் சில உறுப்பினர்கள் அவையில் தமிழில் விவாதித்தனர். எனினும் இன்று பல இளைஞர்கள் முதன்மையாக ஆங்கிலம் பேசுகிறார்கள். இது தமிழை மட்டுமல்ல, பிற தாய்மொழிகளையும் பாதிக்கிறது என்று சிங்கப்பூரின் அமைச்சர் சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை