Apr 22, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூரில் தமிழை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும்-  அமைச்சர் சண்முகம்
உலகச் செய்திகள்

சிங்கப்பூரில் தமிழை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும்- அமைச்சர் சண்முகம்

Share:

சிங்கப்பூர், மே.24-

அடுத்த தலைமுறையினர், சிங்கப்பூரில் தமிழை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்று, அந்நாட்டு அமைச்சர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழிச் சங்கம் நடத்திய நிகழ்வின்போது அவர் இதனைத் தெரிவித்தார். அடுத்த 20, 30 ஆண்டுகளில், தன்னைப் போல இயல்பாக மேடையில் தமிழ் பேசக் கூடிய ஒரு அமைச்சர் இருப்பாரா என்ற கேள்வியை, நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்த தலைமுறையினர் அடுத்த 50 ஆண்டுகளுக்கு சிங்கப்பூரில் தமிழை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும். இன்று ஆங்கிலத்தில் பேசுவதை பலர் உயர்வாகக் கருதுகின்றனர். இதன் காரணமாக தமிழ் பயன்பாட்டில் சரிவு ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூரில் நடைமுறையில் உள்ள நான்கு அதிகாரப்பூர்வ மொழிகளில் தமிழ் ஒன்றாகும். எனினும் தமிழைப் பேசாதவர்களால் அது தொடர்ந்து மதிக்கப்படும் மொழியாக இருக்கும் என்பதை எதிர்பார்க்க முடியுமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

1960- 1970ம் ஆண்டுகளில் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் சில உறுப்பினர்கள் அவையில் தமிழில் விவாதித்தனர். எனினும் இன்று பல இளைஞர்கள் முதன்மையாக ஆங்கிலம் பேசுகிறார்கள். இது தமிழை மட்டுமல்ல, பிற தாய்மொழிகளையும் பாதிக்கிறது என்று சிங்கப்பூரின் அமைச்சர் சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஃபுளோரிடா துப்பாக்கிச்சூடு: சேட்ஜிபிடி 'உடந்தையாக' இருந்ததா? குற்றவியல் விசாரணைக்கு உத்தரவு!

ஃபுளோரிடா துப்பாக்கிச்சூடு: சேட்ஜிபிடி 'உடந்தையாக' இருந்ததா? குற்றவியல் விசாரணைக்கு உத்தரவு!

தமிழகத் தொழில்நுட்பத்துறை வீழ்ச்சி: திமுக அரசைச் சாடினார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

தமிழகத் தொழில்நுட்பத்துறை வீழ்ச்சி: திமுக அரசைச் சாடினார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: இன்றுடன் ஓய்ந்தது தேர்தல் முழக்கம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: இன்றுடன் ஓய்ந்தது தேர்தல் முழக்கம்

அமெரிக்காவில் பயங்கரம்: பதின்ம வயதினர் மோதலில் துப்பாக்கிச்சூடு - இருவர் பலி, ஐவர் காயம்!

அமெரிக்காவில் பயங்கரம்: பதின்ம வயதினர் மோதலில் துப்பாக்கிச்சூடு - இருவர் பலி, ஐவர் காயம்!

ஜம்மு-காஷ்மீர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

ஜம்மு-காஷ்மீர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

ஜப்பானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 3 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 3 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி எச்சரிக்கை