Aug 12, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூரில் தமிழை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும்-  அமைச்சர் சண்முகம்
உலகச் செய்திகள்

சிங்கப்பூரில் தமிழை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும்- அமைச்சர் சண்முகம்

Share:

சிங்கப்பூர், மே.24-

அடுத்த தலைமுறையினர், சிங்கப்பூரில் தமிழை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்று, அந்நாட்டு அமைச்சர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழிச் சங்கம் நடத்திய நிகழ்வின்போது அவர் இதனைத் தெரிவித்தார். அடுத்த 20, 30 ஆண்டுகளில், தன்னைப் போல இயல்பாக மேடையில் தமிழ் பேசக் கூடிய ஒரு அமைச்சர் இருப்பாரா என்ற கேள்வியை, நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்த தலைமுறையினர் அடுத்த 50 ஆண்டுகளுக்கு சிங்கப்பூரில் தமிழை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும். இன்று ஆங்கிலத்தில் பேசுவதை பலர் உயர்வாகக் கருதுகின்றனர். இதன் காரணமாக தமிழ் பயன்பாட்டில் சரிவு ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூரில் நடைமுறையில் உள்ள நான்கு அதிகாரப்பூர்வ மொழிகளில் தமிழ் ஒன்றாகும். எனினும் தமிழைப் பேசாதவர்களால் அது தொடர்ந்து மதிக்கப்படும் மொழியாக இருக்கும் என்பதை எதிர்பார்க்க முடியுமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

1960- 1970ம் ஆண்டுகளில் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் சில உறுப்பினர்கள் அவையில் தமிழில் விவாதித்தனர். எனினும் இன்று பல இளைஞர்கள் முதன்மையாக ஆங்கிலம் பேசுகிறார்கள். இது தமிழை மட்டுமல்ல, பிற தாய்மொழிகளையும் பாதிக்கிறது என்று சிங்கப்பூரின் அமைச்சர் சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.

Related News

இந்தோனேஷியாவில் பயங்கரமான காட்டு தீ பரவுதல் : பள்ளிகள் மூடல்

இந்தோனேஷியாவில் பயங்கரமான காட்டு தீ பரவுதல் : பள்ளிகள் மூடல்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 164 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 164 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

பாங்காக் பள்ளி துப்பாக்கிச் சூடு: குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் துப்பாக்கி பயன்பாட்டில் முன்பே ஆர்வம்

பாங்காக் பள்ளி துப்பாக்கிச் சூடு: குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் துப்பாக்கி பயன்பாட்டில் முன்பே ஆர்வம்

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்:  பணத்தை பாதுகாக்க சென்ற  2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்: பணத்தை பாதுகாக்க சென்ற 2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு

ஜப்பானை உலுக்கும் கடும் வெப்பம்: தோக்கியோ மிருகக்காட்சிசாலையில் 3 சிங்கங்கள் பரிதாப பலி; 43,000 பேர் பாதிப்பு

ஜப்பானை உலுக்கும் கடும் வெப்பம்: தோக்கியோ மிருகக்காட்சிசாலையில் 3 சிங்கங்கள் பரிதாப பலி; 43,000 பேர் பாதிப்பு