Apr 20, 2026
Thisaigal NewsYouTube
உலகச் செய்திகள்

வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய முதியவருக்கு 19 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறை

Share:

சிங்கப்பூர், ஜன.24-

சிங்கப்பூரில் தமது வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய முதியவருக்கு 19 ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 68 வயதான அந்த முதியவர் ஐந்தாண்டுகளுக்கு முன் தமது குடும்பத்தினர் வெளிநாடு சென்றிருந்த போது அக்குற்றத்தைப் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அவ்வாறு செய்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

அம்முதியவர் சம்பந்தப்பட்ட அந்த 35 வயது பணிப் பெண்ணுக்கு மதுபானம் கொடுத்தும் பல ஊசிகளைச் செலுத்தியும் அச்செயலைப் புரிந்தது தெரிய வந்துள்ளது. இதற்கு முன் அவர் மீது குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்ட போதும் அவர் அவற்றை மறுத்திருந்தார். இறுதியில் அவர் அக்குற்றங்களை ஒப்புக் கொண்டார். அதனை அடுத்து அம்முதியவருக்கு 19 ஆண்டுகள் மற்றும் 6 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

Related News

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு