தாய்லாந்திற்கு வரும் அனைத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடமும் 450 பாட், மலேசிய மதிப்பில் சுமார் 55 ரிங்கிட் சுற்றுலா கட்டணம் வசூலிக்கும் திட்டம் குறித்து அந்நாட்டு அரசாங்கம் பொதுமக்களிடம் கருத்து கேட்டு வருகின்றது.
இந்தக் கருத்துக் கேட்பு நடவடிக்கையானது வரும் செப்டம்பர் 28 வரை நடைபெறவுள்ளது.
இத்திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்தால், வரும் 2027-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கட்டணம் வசூலிக்கத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
விமானம், தரை அல்லது கடல் வழியாக வரும் அனைத்து வெளிநாட்டினருக்கும் ஒரே கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கிடைக்கும் நிதியானது சுற்றுலா உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.








