Jun 17, 2026
Thisaigal NewsYouTube
குஜராத்தில் பாலம் இடிந்த விபத்தில் பலி 16ஆக உயர்வு
உலகச் செய்திகள்

குஜராத்தில் பாலம் இடிந்த விபத்தில் பலி 16ஆக உயர்வு

Share:

குஜராத், ஜூலை.11-

குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 16 ஆக உயர்ந்துள்ளது. குஜராத்தில் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும், 40 ஆண்டு கால பழமையான பாலம் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. மஹிசாகர் ஆற்றில் உள்ள காம்பிரா பாலத்தின் ஒரு பகுதி இடிந்ததில், லாரி, வேன், ஆட்டோ என ஐந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்தன.

இதில், குழந்தை உட்பட 11 பேர் உயிரிழந்ததாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மேலும் ஐந்து பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

மாயமான இரண்டு பேரின் உடல்கள் இன்னும் மீட்கப்படாத நிலையில், தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர், ஆற்றின் அடியில் தேடுகின்றனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை