Jun 18, 2026
Thisaigal NewsYouTube
கிளிநொச்சியில் தனியார் கல்வி நிலையங்களின் பொறுப்பற்ற செயல்
உலகச் செய்திகள்

கிளிநொச்சியில் தனியார் கல்வி நிலையங்களின் பொறுப்பற்ற செயல்

Share:

கிளிநொச்சி, ஜூலை 11-

கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையங்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் மாணவர்களின் பாடசாலைக் கல்வி பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பாடசாலை நேரங்களில் தனியார் கல்வி நிலையங்கள் பாடசாலை மாணவர்களுக்கான வகுப்புக்களை நடாத்தி வருகின்றனர். இதனால் பாடசாலைக்கு வராது தனியார் வகுப்புக்களுக்கு மாணவர்கள் செல்கின்றனர்.

இது மாணவர்களுக்கான பாடசாலைக் கல்வியினை பாரியளவில் பாதிப்படையச் செய்து விடும் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

தனியார் கல்வி நிலையத்திற்கு பணம் செலுத்தி செல்லும் மாணவர்களின் இயல்பு பாடசாலைக் கல்வியை மட்டும் நம்பி தங்கள் கல்வியைத் தொடரும் வறிய மாணவர்களின் எதிர்காலத்தை வெகுவாக பாதித்து விடும் என இது தொடர்பில் சமூகவிடய ஆய்வாளருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது அவர் குறிப்பிட்டிருந்தார்.

தனியார் கல்வி நிலையங்கள் பாடசாலை நேரங்களில் பாடசாலை மாணவர்களுக்கு வகுப்புக்களை முன்னெடுத்துச் செல்வதை தடுக்க வேண்டும்.பாடசாலைக் கல்வியோடு பாடசாலையின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்கும்படி தனியார் கல்வி நிலையங்கள் இயங்க வகை செய்ய வேண்டும்.

இது தொடர்பில் மாவட்ட மட்டத்திலான பொறுப்பு வாய்ந்த செயற்பாடுகளை விரைவாக உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

Related News

மகனின் உடலை எழுப்ப முயன்ற தந்தையின் நெஞ்சையுருக்கும் பாசம்

மகனின் உடலை எழுப்ப முயன்ற தந்தையின் நெஞ்சையுருக்கும் பாசம்

உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்க்கச் சீனா விடுத்த அழைப்புக்குத் தைவான் கடும் எதிர்ப்பு

உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்க்கச் சீனா விடுத்த அழைப்புக்குத் தைவான் கடும் எதிர்ப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்