மாஸ்கோ: உயிரிழந்த கணவரின் சடலத்துடன் 4 ஆண்டுகள் பெண் ஒருவர் தனது குழந்தைகளுடன் குடும்பம் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் லெனின்கிராட் பகுதியில் உள்ள ஸ்டாரோசிவர்ஸ்காயா எனும் கிராமத்தில் 50 வயதான ஸ்வெட்லானா எனும் பெண்மணி 49 வயதான விளாதிமிர் எனும் கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்திருக்கிறார். இரு தினங்களுக்கு முன்னர் இவரது வீட்டிற்கு சமூக நல பணியாளர்கள் வந்திருக்கிறார்கள். ரஷ்யாவில் குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணிக்க சமூக நல பணியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு வீடாக செல்லும் போது இவர்கள் வீட்டிற்கும் வந்து, குழந்தைகளை பரிசோதித்துள்ளனர். பரிசோதனையின்போது குழந்தைகள் மனதளவில் பதற்றமடைந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
இதனையடுத்து இந்த பணியாளர்கள் குழந்தைகள் வசிக்கும் வீட்டை முழு சோதனையிட்டனர். அப்போதுதான் அந்த அதிர்ச்சி சம்பவம் வெளி உலகிற்கு தெரிய வந்திருக்கிறது. அதாவது, இவர்கள் வீட்டில் முற்றிலும் காய்ந்துபோன, ஏறத்தாழ ஒரு மம்மியை போன்ற சடலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதை பார்த்த பணியாளர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கும், போலீசுக்கும் தகவல் கொடுக்க அவர்கள் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றியுள்ளனர்.
விசாரணையில் பல அமானுஷ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, கைப்பற்றப்பட்ட சடலம் இந்த வீட்டில் வசித்து வரும் ஸ்வெட்லானா எனும் பெண்ணின் கணவராவார். கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர் உயிரிழந்துள்ளார். அதாவது, ஸ்வெட்லானாவுக்கும் கணவர் விளாதிமிருக்கும் சம்பவத்தன்று வாக்குவாதம் முற்றியிருக்கிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற ஸ்வெட்லானா, "நீ செத்து போயிடுவ" என கணவரை பார்த்து சாபமிட்டுள்ளார்.