Apr 21, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 47-வது ஆசியான் உச்சி மாநாட்டின் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது மலேசியா!
உலகச் செய்திகள்

கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 47-வது ஆசியான் உச்சி மாநாட்டின் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது மலேசியா!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.24-

வரும் அக்டோபர் 26-ஆம் தேதி கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் துவங்கவுள்ள 47வது ஆசியான் உச்சி மாநாட்டுக்கு உலகத் தலைவர்கள் பலர் வருகை புரியவுள்ளதால் மலேசியாவின் மீது உலகின் கவனம் திரும்பியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இம்மாநாட்டிற்கு வருகை புரியவுள்ளது சிறப்பம்சமாகப் பார்க்கப்படுகின்றது.

இன்று வெள்ளிக்கிழமை பிரேசில் அதிபர் Luiz Inácio Lula da Silva, சீனாவின் துணைப் பிரதமர் He Lifeng, தென்னாப்பிரிக்க அதிபர் Matamela Cyril Ramaphosa உள்ளிட்ட தலைவர்கள் கோலாலம்பூர் வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், தலைநகர் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹி தலைமையில், மலேசியாவில் நடைபெறும் இம்மாநாடு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாகும்.

சீனா, ஜப்பான், ரஷ்யா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

அதே வேளையில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து 2,854 ஊடகவியலாளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ளப் பதிவுச் செய்துள்ளனர்.

மலேசியா இதுவரை நடத்திய மிகப் பெரிய சர்வதேச மாநாடுகளில் இதுவும் ஒன்றாகும்.

Related News

ஜம்மு-காஷ்மீர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

ஜம்மு-காஷ்மீர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

ஜப்பானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 3 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 3 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி எச்சரிக்கை

மகளைப் பறிகொடுத்த தாய்: சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நெஞ்சை உருக்கும் வாக்குமூலம்!

மகளைப் பறிகொடுத்த தாய்: சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நெஞ்சை உருக்கும் வாக்குமூலம்!

அமெரிக்காவில் பயங்கரம்: 8 குழந்தைகளைச் சுட்டுக் கொன்ற தந்தை!

அமெரிக்காவில் பயங்கரம்: 8 குழந்தைகளைச் சுட்டுக் கொன்ற தந்தை!

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!