Jun 17, 2026
Thisaigal NewsYouTube
உலகச் செய்திகள்

தேர்வுக்கு பயந்து ஓடிப் போன சிறுவன்

Share:

புதுடெல்லி, மார்ச்.03-

டெல்லி, கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பயிலும் மாணவன் வகுப்பு இறுதித் தேர்வை எழுத விருப்பமில்லாமல் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. தொடக்க பள்ளியில் பயின்று வந்த அம்மாணவன், ஆண்டு இறுதித் தேர்வை எழுத தனக்கு மனம் இல்லை என்பதால் வீட்டை விட்டுச் செல்வதாகவும் தம்மைத் தேட வேண்டாம் எனவும் தமது தந்தைக்கு கடிதம் எழுதியிருந்ததும் தெரிய வந்துள்ளது.

அவனது தந்தை புகார் அளிக்க போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அச்சிறுவன் வீட்டை விட்டு வெளியேறி சுமார் 2, 000 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து தமிழகம்-கர்நாடக எல்லை அருகே உள்ள கிருஷ்ணகிரி பகுதியில் இருந்தது கண்டறியப்பட்டது. போலீசார் அங்கு சென்று அச்சிறுவனை மீட்டனர்.

பெங்களூருவில் தெரிந்த ஒருவரைத் தொடர்பு கொண்டு ரயில் மூலம் அங்கு சென்ற அச்சிறுவன், தமிழ்நாடு-கர்நாடக எல்லை அருகே உள்ள கட்டுமானப் பகுதியில் கூலி வேலை செய்யத் தொடங்கியதும் தெரிய வந்துள்ளது. அங்கு குடிசையில் வசித்து வந்த அச்சிறுவனைப் போலீசார் மீட்டனர்.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை