Jun 22, 2026
Thisaigal NewsYouTube
"கழுதை" விமானம்.. பிரான்ஸில் சிக்கிய 300+ இந்தியர்கள் கதி என்ன.. வெளியான புது தகவல்! பின்னணி என்ன
உலகச் செய்திகள்

"கழுதை" விமானம்.. பிரான்ஸில் சிக்கிய 300+ இந்தியர்கள் கதி என்ன.. வெளியான புது தகவல்! பின்னணி என்ன

Share:

டெல்லி: பிரான்ஸ் நாட்டில் இந்தியர்களுடன் சிக்கிய விமானம் இப்போது மும்பைக்குத் திரும்பியுள்ள நிலையில், இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.

துபாயில் இருந்து நிகரகுவா நோக்கிச் சென்ற விமானத்தில் ஆள் கடத்தல் நடந்ததாக பிரான்ஸ் அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் 300+ இந்தியர்கள் இருந்த அந்த விமானத்தை பிரான்ஸ் அதிகாரிகள் தரையிறக்கினர்.

அங்கே விமானத்தை நிறுத்தி வைத்து சில நாட்கள் வரை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விமானத்தில் மொத்தம் 300 பேர் இருந்த நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்று கூறப்பட்டது.

பிரான்ஸில் பரபரப்பு: பாரீஸுக்கு அருகே வாட்ரி விமான நிலையத்தில் இந்த விமானம் சனிக்கிழமை தரையிறக்கப்பட்டது. ஆள் கடத்தல் புகாரைத் தொடர்ந்து, அந்த விமானத்தை அங்கேயே தடுத்து நிறுத்தி நான்கு நாட்கள் அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு இப்போது அந்த ஏர்பஸ் ஏ340 விமானம் 276 பயணிகளுடன் மும்பையில் தரையிறங்கியுள்ளது. இன்று காலை 4 மணியளவில் அந்த விமானம் மும்பையில் தரையிறங்கியது.

பிரான்ஸ் நேரப்படி பிற்பகல் 2.30 மணியளவில் அந்த விமானம் வத்ரி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட நிலையில், இன்று அதிகாலை அது மும்பையில் தரையிறங்கியது. மொத்தம் 276 பயணிகளுடன் அந்த விமானம் மும்பைக்குத் திரும்பியது. அதே நேரம் விமானத்தில் இருந்த ஐந்து சிறார்கள் உட்பட 27 நபர்கள் பிரெஞ்சு மண்ணில் அகதிகளாக இருக்கப் புகலிடம் கோரியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Related News

ஈரான் - அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: அடுத்த வாரம் தொழில்நுட்ப விவாதங்களை தொடங்க சுவிட்சர்லாந்து வரவேற்பு

ஈரான் - அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: அடுத்த வாரம் தொழில்நுட்ப விவாதங்களை தொடங்க சுவிட்சர்லாந்து வரவேற்பு

கத்தாரில் உள்ள எரிவாயு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து: 54 பேர் காயம், 18 பேரைக் காணவில்லை

கத்தாரில் உள்ள எரிவாயு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து: 54 பேர் காயம், 18 பேரைக் காணவில்லை

மோசடிக் கும்பலுடன் தொடர்பு - சிங்கப்பூர் 3 மலேசியர்கள் கைது

மோசடிக் கும்பலுடன் தொடர்பு - சிங்கப்பூர் 3 மலேசியர்கள் கைது

முதலாவது வெளிநாட்டுப் பயணம்: இந்தியாவைத் தவிர்த்து மலேசியா, சீனாவைத் தேர்ந்தெடுத்தார் பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான்!

முதலாவது வெளிநாட்டுப் பயணம்: இந்தியாவைத் தவிர்த்து மலேசியா, சீனாவைத் தேர்ந்தெடுத்தார் பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான்!

லண்டனில் இரண்டு ரயில்கள் பயங்கர மோதல்: ஓட்டுநர் பலி, 89 பேர் காயம்

லண்டனில் இரண்டு ரயில்கள் பயங்கர மோதல்: ஓட்டுநர் பலி, 89 பேர் காயம்

தேசிய கீதம் பாழானது: புகைப்படக் கலைஞர்கள் மீது இங்கிலாந்து பயிற்சியாளர் தாமஸ் துச்செல் அதிருப்தி

தேசிய கீதம் பாழானது: புகைப்படக் கலைஞர்கள் மீது இங்கிலாந்து பயிற்சியாளர் தாமஸ் துச்செல் அதிருப்தி