Jun 13, 2026
Thisaigal NewsYouTube
டெல்லியில் கார் வெடித்துச் சிதறியது: 13 பேர் பலி, 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
உலகச் செய்திகள்

டெல்லியில் கார் வெடித்துச் சிதறியது: 13 பேர் பலி, 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Share:

புதுடெல்லி, நவம்பர்.11-

இந்தியாவின் தலைநகரான டெல்லி செங்கோட்டை அருகே நேற்று திங்கட்கிழமை மாலை கார் ஒன்று வெடித்துச் சிதறியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று மாலை வழக்கம் போல், செங்கோட்டை அருகே சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்த நேரத்தில், சிக்னலில் நின்று கொண்டிருந்த Hyundai i20 இரக கார் ஒன்று வெடித்துச் சிதறியது.

இதில் அதன் அருகே நின்று கொண்டிருந்த சில கார்களும் தீப்பற்றியதோடு, கிட்டத்தட்ட 150 மீட்டருக்குத் தூக்கி வீசப்பட்டன.

இச்சம்பவம் தீவிரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதையடுத்து, டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ரயில், பேருந்து, விமான நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தளங்களில் உடனடியாக பாதுகாப்புச் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Related News

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி