Apr 21, 2026
Thisaigal NewsYouTube
ஜப்பானில் எரிமலை நெருப்பு பிழம்புடன் சீற்றம்: விமானச் சேவைகள் ரத்து
உலகச் செய்திகள்

ஜப்பானில் எரிமலை நெருப்பு பிழம்புடன் சீற்றம்: விமானச் சேவைகள் ரத்து

Share:

தோக்யோ, நவம்பர்.17-

ஜப்பானில் 13 மாதங்களாக அமைதியாக இருந்த எரிமலை குமுறியதால் அங்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

ஜப்பான் எரிமலைகள் அதிகம் காணப்படும் நாடாகும். இங்கு எப்போது எரிமலை விழித்து, நெருப்புப் பிழம்புகளை உமிழத் தொடங்கும் என்று தெரியாது. இந்நிலையில் 13 மாதங்களாக அமைதியாக இருந்த சகுராஜிமா என்ற எரிமலை இப்போது நெருப்பை உமிழத் தொடங்கி இருக்கிறது. இந்த எரிமலை ககோஷிமா நகரத்தின் அருகில் உள்ளது.

அடுத்தடுத்து 2 முறை நெருப்புப் பிழம்புகளை உமிழ்ந்ததால் வானில் கிட்டத்தட்ட 4.4 கிலோமீட்டர் தூரம் புகை மண்டலமாகவும், புழுதியாகவும் காட்சியளித்தது. இது அந்நாட்டின் விமானச் சேவையை முற்றிலும் பாதித்துள்ளது.

வான்வழி பாதையில் புகை, சாம்பல்கள் நிரம்பி காணப்பட்டதால் ககோஷிமா விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 30க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நகரங்களுக்குச் செல்ல வேண்டிய விமானங்களின் வருகை, புறப்பாடுகளும் தாமதமாகியிருக்கின்றன.

சகுராஜிமா எரிமலை ஜப்பானின் பிரபலமான எரிமலையாகும். 2019ம் ஆண்டு நெருப்பு பிழம்புகளை உமிழ்ந்த போது, வானில் 5.5 கிமீ புகை மண்டலமாகவும், தூசுகள் நிரம்பி காணப்பட்டது.

Related News

ஜம்மு-காஷ்மீர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

ஜம்மு-காஷ்மீர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

ஜப்பானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 3 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 3 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி எச்சரிக்கை

மகளைப் பறிகொடுத்த தாய்: சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நெஞ்சை உருக்கும் வாக்குமூலம்!

மகளைப் பறிகொடுத்த தாய்: சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நெஞ்சை உருக்கும் வாக்குமூலம்!

அமெரிக்காவில் பயங்கரம்: 8 குழந்தைகளைச் சுட்டுக் கொன்ற தந்தை!

அமெரிக்காவில் பயங்கரம்: 8 குழந்தைகளைச் சுட்டுக் கொன்ற தந்தை!

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!