Apr 19, 2026
Thisaigal NewsYouTube
9ஆம் வகுப்பில் ஃபெயிலான சிறுமி சுட்டுக்கொலை! சொந்த அண்ணனே செய்த அட்டூழியம்!!
உலகச் செய்திகள்

9ஆம் வகுப்பில் ஃபெயிலான சிறுமி சுட்டுக்கொலை! சொந்த அண்ணனே செய்த அட்டூழியம்!!

Share:

ஆகஸ்ட் 12

தனது சகோதரி பள்ளித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதை அறிந்த சகோதரர் கட்டுக்கடங்காத கோபத்தில் சிறுமியைச் சுட்டுக் கொன்றதாக முதல்கட்டத் தகவலில் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானில் ஒன்பதாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததால், சொந்த அண்ணனே தனது சகோதரியைச் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்நாட்டின் ஹுஜ்ரா ஷா முகீமின் அடாரி ரோடு பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

முதற்கட்ட தகவல்களின்படி, தனது சகோதரி பள்ளித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதை அறிந்த சகோதரர் கட்டுக்கடங்காத கோபத்தில் சிறுமியைச் சுட்டுக் கொன்றதாக முதல்கட்டத் தகவலில் தெரியவந்துள்ளது. சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் காப்பாற்ற முயன்றபோதும் சிறுமியைக் காப்பாற்ற முடியவில்லை.

சிறுமியின் சொந்த வீட்டில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது பற்றி உள்ளூர் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் எஃப்ஐஆர் பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

சொந்த சகோதரியையே கொடூரமாக் கொன்றுவிட்டு, தப்பி ஓடிய சகோதரர் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. அவரைப் பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Related News

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு