ஜப்பான், தோக்யோ அருகே திடீரென ஏற்பட்ட குழி விரிவடைந்து வரும் நிலையில், அப்பகுதிக்கு அருகே உள்ள ஐந்து வீடுகளில் உள்ளவர்கள் தத்தம் இருப்பிடங்களைக் காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வேளையில் குழியினுள் சிக்கியிருந்த டிரக் ஓட்டுனரை மீட்கும் முயற்சிகள் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
74 வயதான அந்த டிரக் ஓட்டுநர் கடந்த செவ்வாய்க்கிழமையன்று அக்குழியினுள் விழுந்தார். அது 40 மீட்டர் வரை விரிவடைந்தத. அது கிட்டதட்ட ஒலிம்பிக் நீச்சல் குளத்தின் நீளமாகும்.
எனவே தத்தம் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நாடுமாறூ அருகில் உள்ள ஐந்து வீடுகளில் வசிப்பவர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று, ஜப்பானிய மீட்புப்படையினர் கனரக உபகரணங்களை அனுப்பவும் டிரக் டிரைவரை அடையவும் 30 மீட்டர் சாய்வைக் கட்டி முடித்தனர். ஆனால் சரிவின் அடியில் கழிவுநீர் கண்டுபிடிக்கப்பட்டது. மழை நீரும் இருந்ததால் மீட்பு பணி நிறுத்தப்பட்டது.
உலகச் செய்திகள்
தோக்யோ அருகே பெரிய பள்ளம், டிரக் ஓட்டுனர் அதில் விழுந்ததால், வீடுகளைக் காலி செய்ய அருகில் உள்ளவர்களுக்கு கோரிக்கை
Related News

மெட்டாவில் இருந்து 15,000 பேர் பணி நீக்கம்

பேங்காக் அருகே ஓடும் ரயில் மீது கிரேன் விழுந்த சம்பவம்: பலி எண்ணிக்கை 29ஆக உயர்வு

பூக்கெட் அருகே எட்டிஹாட் விமானத்தில் திடீர் குலுக்கல்: பயணிகள் மற்றும் சிப்பந்திகள் காயம்

தாய்லாந்து ரயில் விபத்து: பாரந்தூக்கி இயந்திரம் விழுந்ததில் குறைந்தது 22 பேர் பலி

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 544 பேர் பலி


