ஜப்பான், தோக்யோ அருகே திடீரென ஏற்பட்ட குழி விரிவடைந்து வரும் நிலையில், அப்பகுதிக்கு அருகே உள்ள ஐந்து வீடுகளில் உள்ளவர்கள் தத்தம் இருப்பிடங்களைக் காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வேளையில் குழியினுள் சிக்கியிருந்த டிரக் ஓட்டுனரை மீட்கும் முயற்சிகள் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
74 வயதான அந்த டிரக் ஓட்டுநர் கடந்த செவ்வாய்க்கிழமையன்று அக்குழியினுள் விழுந்தார். அது 40 மீட்டர் வரை விரிவடைந்தத. அது கிட்டதட்ட ஒலிம்பிக் நீச்சல் குளத்தின் நீளமாகும்.
எனவே தத்தம் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நாடுமாறூ அருகில் உள்ள ஐந்து வீடுகளில் வசிப்பவர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று, ஜப்பானிய மீட்புப்படையினர் கனரக உபகரணங்களை அனுப்பவும் டிரக் டிரைவரை அடையவும் 30 மீட்டர் சாய்வைக் கட்டி முடித்தனர். ஆனால் சரிவின் அடியில் கழிவுநீர் கண்டுபிடிக்கப்பட்டது. மழை நீரும் இருந்ததால் மீட்பு பணி நிறுத்தப்பட்டது.
உலகச் செய்திகள்
தோக்யோ அருகே பெரிய பள்ளம், டிரக் ஓட்டுனர் அதில் விழுந்ததால், வீடுகளைக் காலி செய்ய அருகில் உள்ளவர்களுக்கு கோரிக்கை
Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை


