Nov 13, 2025
Thisaigal NewsYouTube
மெக்சிகோவில் பேரங்காடியில் தீப்பற்றியதில் 23 பேர் உயிரிழப்பு
உலகச் செய்திகள்

மெக்சிகோவில் பேரங்காடியில் தீப்பற்றியதில் 23 பேர் உயிரிழப்பு

Share:

மெக்சிகோ, நவம்பர்.02

மெக்சிகோவில் பேரங்காடியொன்றில் தீப்பற்றியதில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயம் அடைந்தனர்.

மெக்சிகோவின் சோனோராவில் அந்த பேரங்காடி இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மக்கள் வழக்கம் போல் பொருட்கள் வாங்கி கொண்டு இருந்தனர். அப்போது திடீரென தீப்பற்றிக் கொண்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்தனர். பின்னர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த சம்பவத்தில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் காயம் அடைந்தவர்களுக்கும் உதவ, உள்துறை அமைச்சருக்கு மெக்சிகோ அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

பேரங்காடியில் திடீரென தீப்பற்றியதுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விசாரணை நடந்து வருகிறது.

Related News