Jun 13, 2026
Thisaigal NewsYouTube
தாய்லாந்தில் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் மலேசியர்
உலகச் செய்திகள்

தாய்லாந்தில் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் மலேசியர்

Share:

பாங்காக், நவம்பர்.09-

தாய்லாந்தில், மலேசியாவைச் சேர்ந்த ஒரு நபர் அரசு அதிகாரி போல நடித்து, ஒரு மூதாட்டியிடம் இருந்து 3.3 மில்லியன் பாட், அதாவது மலேசியப் பதிப்பில் சுமார் 426 ஆயிரம் ரிங்கிட் பணத்தை மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சபா மாநிலத்தைச் சேர்ந்த 26 வயதான டான் என்று அறியப்படும் அந்த நபர், போலி ஆவணங்கள், வீடியோ அழைப்புகள் மூலம் அந்த 70 வயது மூதாட்டியை நம்ப வைத்து, அவரின் வங்கிக் கணக்கு சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் சிக்கியுள்ளதாக மிரட்டியுள்ளார்.

இந்த மோசடியால் அச்சமடைந்த பாதிக்கப்பட்ட மூதாட்டி, தனது பணத்தையும் மதிப்புமிக்க பொருட்களையும் "சோதனைக்காக" வழங்குமாறு கூறப்பட்டதன் பேரில், மொத்தம் 3.3 மில்லியன் பாட்டை அந்த நபரிடம் ஒப்படைத்துள்ளார். வாக்குறுதியளித்தபடி பணம் திரும்பக் கிடைக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி அளித்த புகாரின் பேரில், டான் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த மோசடிக் கும்பலின் மற்ற உறுப்பினர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related News

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி