Oct 18, 2025
Thisaigal NewsYouTube
ராணி எலிசபெத் இறுதிச் சடங்கில் கலந்து கொள்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
உலகச் செய்திகள்

ராணி எலிசபெத் இறுதிச் சடங்கில் கலந்து கொள்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

Share:

ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொள்கிறார். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் நேற்று முன் தினம் (செப்.8) மறைந்தார். அவரது மறைவை அடுத்து மூன்றாம் சார்லஸ் முறைப்படி மன்னராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். மகாராணியின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஒஹியோ மாகாணத்தில் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பைடன் இத்தகவலைத் தெரிவித்தார். அவர் கூறுகையில், சார்லஸை எனக்கு நன்றாகத் தெரியும். நான் இன்னும் அவரிடம் பேசவில்லை. ஆனால், இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் நான் நேரில் பங்கேற்பேன் என்றார்.

Related News