Oct 17, 2025
Thisaigal NewsYouTube
ஆப்கானிஸ்தானுக்கு 21 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைத்த இந்தியா
உலகச் செய்திகள்

ஆப்கானிஸ்தானுக்கு 21 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைத்த இந்தியா

Share:

புதுடில்லி, செப்டம்பர்.03-

நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு 21 டன் நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி உள்ளது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நில நடுக்கம் அந்நாட்டையே உலுக்கி உள்ளது. ஆயிரக்கணக்கானோர் பலியாகி இருக்கின்றனர். ஏராளமானோரைக் காணவில்லை. 5000க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகி இருக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள சூழலை கருத்தில் கொண்டு அந்நாட்டுக்கு உதவுவதாக இந்தியா அறிவித்தது. அவ்வகையில் அந்நாட்டுக்கு 21 டன் எடையில் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.

நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன. காபூலுக்கு வான் வழியாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன. மருந்துப் பொருட்கள், போர்வைகள், சக்கர நாற்காலிகள் என விமானம் மூலம் 21 டன் நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.

அங்குள்ள நிலைமையை இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. வரும் நாட்களில் மேலும் நிவாரண பொருட்கள் அங்கு அனுப்பி வைக்கப்படும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறி உள்ளார்.

Related News

ஆப்கானிஸ்தானுக்கு 21 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைத்த... | Thisaigal News