Jun 22, 2026
Thisaigal NewsYouTube
அதிரடி கைது.. காங்கிரசுக்கு உலை வைத்த மகாதேவ் செயலி.. துபாயில் சிக்கிய மற்றொரு உரிமையாளர்.. பின்னணி
உலகச் செய்திகள்

அதிரடி கைது.. காங்கிரசுக்கு உலை வைத்த மகாதேவ் செயலி.. துபாயில் சிக்கிய மற்றொரு உரிமையாளர்.. பின்னணி

Share:

துபாய்: சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்த மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலி மோசடி தொடர்பாக அதன் மற்றொரு உரிமையாளரான சவுரப் சந்திரகர் துபாயில் சிக்கி உள்ளார்.

வடஇந்திய மாநிலங்களில் பெரிதாக பேசப்பட்டு வரும் மோசடி என்றால் அது மகாதேவ் சூதாட்ட செயலி மோசடியாகும். இந்த மோசடியில் பல அரசியல் கட்சி தலைவர்களின் பெயர்கள் அடிப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு எல்லாம் முக்கிய காரணம் யார் என்றால் 2 பேர்.

அதாவது சத்தீஸ்கரை சேர்ந்தவர் சவுரப் சந்திரகர். இவரது நண்பர் ரவி உப்பால். இவர்கள் 2 பேரும் துபாய் சென்ற நிலையில் போக்கர், கார்டு கேம்ஸ், டென்னிஸ், கிரிக்கெட், பாட்மிண்டன், கால்பந்து உள்ளிட்ட பல விளையாட்டுகளுக்கான சூதாட்ட செயலியை உருவாக்கினர். இந்த செயலியின் பெயர் தான் மகாதேவ்.

இந்த மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்களான சவுரப் சந்திரகர், ரவி உப்பால் ஆகியோர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. செயலியை புரோமோஷன் செய்வதற்கான அரசியல் கட்சி தலைவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் ஹவாலா பணப்பரிமாற்றத்தை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

அதோடு இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்தும் இந்தச் செயலி வாயிலாக சூதாட்டம் நடைபெற்றிருக்கிறது. இதையடுத்து அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது. சவுரப் சந்திரகர், ரவி உப்பால் ஆகியோர் துபாயில் தலைமைறைவாக இருந்து வந்தனர். இதையடுத்து இருவருக்கும் ரெட் கார்னர் நோட்டீஸ் அமலாக்கத்துறை சார்பில் வழங்கப்பட்டது. மேலும் துபாய் அதிகாரிகளுடன் அமலாக்கத்துறையின் தொடர்பில் இருந்து வந்தனர்.

Related News

ஈரான் - அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: அடுத்த வாரம் தொழில்நுட்ப விவாதங்களை தொடங்க சுவிட்சர்லாந்து வரவேற்பு

ஈரான் - அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: அடுத்த வாரம் தொழில்நுட்ப விவாதங்களை தொடங்க சுவிட்சர்லாந்து வரவேற்பு

கத்தாரில் உள்ள எரிவாயு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து: 54 பேர் காயம், 18 பேரைக் காணவில்லை

கத்தாரில் உள்ள எரிவாயு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து: 54 பேர் காயம், 18 பேரைக் காணவில்லை

மோசடிக் கும்பலுடன் தொடர்பு - சிங்கப்பூர் 3 மலேசியர்கள் கைது

மோசடிக் கும்பலுடன் தொடர்பு - சிங்கப்பூர் 3 மலேசியர்கள் கைது

முதலாவது வெளிநாட்டுப் பயணம்: இந்தியாவைத் தவிர்த்து மலேசியா, சீனாவைத் தேர்ந்தெடுத்தார் பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான்!

முதலாவது வெளிநாட்டுப் பயணம்: இந்தியாவைத் தவிர்த்து மலேசியா, சீனாவைத் தேர்ந்தெடுத்தார் பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான்!

லண்டனில் இரண்டு ரயில்கள் பயங்கர மோதல்: ஓட்டுநர் பலி, 89 பேர் காயம்

லண்டனில் இரண்டு ரயில்கள் பயங்கர மோதல்: ஓட்டுநர் பலி, 89 பேர் காயம்

தேசிய கீதம் பாழானது: புகைப்படக் கலைஞர்கள் மீது இங்கிலாந்து பயிற்சியாளர் தாமஸ் துச்செல் அதிருப்தி

தேசிய கீதம் பாழானது: புகைப்படக் கலைஞர்கள் மீது இங்கிலாந்து பயிற்சியாளர் தாமஸ் துச்செல் அதிருப்தி