Apr 17, 2026
Thisaigal NewsYouTube
தள்ளிப்போகும் போர் நிறுத்தம்.. பாலஸ்தீனிய கைதிகளை இன்று விடுவிக்க முடியாது! இஸ்ரேல் கொடுத்த ஷாக்
உலகச் செய்திகள்

தள்ளிப்போகும் போர் நிறுத்தம்.. பாலஸ்தீனிய கைதிகளை இன்று விடுவிக்க முடியாது! இஸ்ரேல் கொடுத்த ஷாக்

Share:

இஸ்ரேல்: இஸ்ரேல்-காசா இடையே தற்காலிகமாக 4 நாட்கள் போர் நிறுத்தம் என்பது இன்று முதல் தொடங்கும் என கூறப்பட்ட நிலையில் அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு உள்ளது. கடந்த மாதம் 7 ம்தேதி இந்த மோதல் என்பது போராக மாறியது. அதாவது அன்றைய தினம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்படும் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது.

இதில் இஸ்ரேலை சேர்ந்த 1000க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். அதோடு எல்லை தாண்டி இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலியர்களை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். இதையடுத்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போர் தொடங்கிவிட்டதாக கூறி காசா மீது தாக்குதலை தொடங்கினார்.

இந்த தாக்குதல் 7 வது வாரமாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேலின் வான்வெளி தாக்குதல், தரைவழி தாக்குதலால் காசா நகர் உருக்குலைந்துள்ளது. காசாவை சேர்ந்த 14 ஆயிரத்துக்கும் அதிகானவர்கள் பியான நிலையில் பல்லாயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்தியா உள்பட பல உலக நாடுகள் போரை நிறுத்த கூறியும் இஸ்ரேல் கேட்காமல் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

Related News

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ: நாடு முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ: நாடு முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கொவிட்-19 போல ஈரான் போரும் இந்தியப் பொருளியலைச் சிதைக்கும் என கணிப்பு

கொவிட்-19 போல ஈரான் போரும் இந்தியப் பொருளியலைச் சிதைக்கும் என கணிப்பு

எண்ணெய் நெருக்கடி: தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஜப்பான் $12.7 பில்லியன் கடனுதவி!

எண்ணெய் நெருக்கடி: தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஜப்பான் $12.7 பில்லியன் கடனுதவி!

ஈரானில் போர் மேகங்கள்: தாய்லாந்து குடிமக்கள் உடனடியாக வெளியேறத் தயாராக இருக்க அறிவுறுத்தல்

ஈரானில் போர் மேகங்கள்: தாய்லாந்து குடிமக்கள் உடனடியாக வெளியேறத் தயாராக இருக்க அறிவுறுத்தல்

தெலுக் பாங்லிமா காராங் பகுதியில் ரூ.1.1 கோடி மதிப்பிலான என்ஜின் ஆயில் கடத்தல் முறியடிப்பு; 7 பேர் கைது!

தெலுக் பாங்லிமா காராங் பகுதியில் ரூ.1.1 கோடி மதிப்பிலான என்ஜின் ஆயில் கடத்தல் முறியடிப்பு; 7 பேர் கைது!