Jul 28, 2026
Thisaigal NewsYouTube
வட இந்தியாவில் நீடிக்கும் கடும் பனி
உலகச் செய்திகள்

வட இந்தியாவில் நீடிக்கும் கடும் பனி

Share:

புதுடில்லி, டிசம்பர்.22-

வட இந்தியாவில் இரண்டு நாட்களுக்கு கடும்பனி நிலவும் என்றும் இதனால் விமானங்கள், ரயில்கள் சேவை பாதிக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. சாலைகளில் எதிரில் இருப்பது தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் சாலை போக்குவரத்து மட்டுமல்லாது, விமானச் சேவைகளும் கடுமையாகக் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விமானங்கள், ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

இந்நிலையில் மேலும் 2 நாட்களுக்கு விமானங்கள், ரயில்கள் சேவை பாதிக்கும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மூடுபனி 2 நாட்களுக்கு வட இந்தியா முழுவதும் நிலவும். இதனால் விமானங்கள், ரயில்கள் சேவை பாதிக்கக்கூடும். மூடுபனியின் தீவிரம் படிப்படியாக குறையக்கூடும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்த சூழலில், இன்று விமானங்கள், ரயில்கள் சேவை சற்று மேம்பட்டிருந்தாலும் திடீர் வானிலை மாற்றங்கள் காரணமாக சேவைகள் பாதிக்க வாய்ப்புள்ளது என்பதால் பயணிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு, விமான நிறுவனங்கள் அறிவுறுத்தல்கள் வழங்கி உள்ளன. பயணிகள் விமான நிலையத்திற்கு வருபவதற்கு முன்பு, தங்களது விமான நிலையை இணையத்தளத்தில் அறிந்து கொள்ள வேண்டும் என விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Related News

கல்வி அமைச்சர் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய போராட்டத்தைத் தொடங்கிய இந்தியாவின் 'கரப்பான் பூச்சி' கட்சி

கல்வி அமைச்சர் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய போராட்டத்தைத் தொடங்கிய இந்தியாவின் 'கரப்பான் பூச்சி' கட்சி

ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கம்: மேலும் ஆறு கப்பல்களை வழிமறித்து தடுத்தது ஈரான் கடற்படை

ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கம்: மேலும் ஆறு கப்பல்களை வழிமறித்து தடுத்தது ஈரான் கடற்படை

சியாட்டில் அருகே நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு: இருவர் பலி மற்றும் நால்வர் காயம்

சியாட்டில் அருகே நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு: இருவர் பலி மற்றும் நால்வர் காயம்

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் வரலாறு காணாத காட்டுத் தீ: கடும் வெப்பத்தால் தீவிரமடையும் நெருக்கடி

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் வரலாறு காணாத காட்டுத் தீ: கடும் வெப்பத்தால் தீவிரமடையும் நெருக்கடி

அணு ஆயுத நீக்கக் கோரிக்கை: ஆசியான் அமைப்புக்கு கிம் ஜாங் உன் சகோதரி கடும் கண்டனம்

அணு ஆயுத நீக்கக் கோரிக்கை: ஆசியான் அமைப்புக்கு கிம் ஜாங் உன் சகோதரி கடும் கண்டனம்

இந்தியாவில் தொடர் மாணவர் போராட்டங்களால் கல்வி அமைச்சர் ராஜிநாமா

இந்தியாவில் தொடர் மாணவர் போராட்டங்களால் கல்வி அமைச்சர் ராஜிநாமா