ரிகியவிக்: ஐஸ்லாந்து நாட்டில் உள்ள ஒரு ஊரில் வெறும் சில மீட்டர் அடியில் எரிமலை பிழம்பு இருக்கிறது. இதனால் அந்த கிராமத்தில் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்ற சூழலே இருக்கிறது.
இந்த உலகம் எப்போதும் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது. நாம் இப்போது பார்க்கும் பகுதிகள் எப்போதும் அதேபோல இருந்தது இல்லை. உதாரணத்திற்கு இன்று பாலைவனமாக இருக்கும் சகாரா பாலைவனம், பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பெருங்கடலாக இருந்து.
அப்பகுதியில் காலப்போக்கில் புவியியல் மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில், அது இப்போது பாலைவன நிலப்பரப்பாக மாறியது. இதுபோல உலகில் பல மாற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.
ஐஸ்லாந்து கிராமம்: அப்படியொரு சம்பவம் தான் ஐஸ்லாந்தில் நடக்கிறது. ஆனால், இது மனிதர்களுக்கு மிக பெரிய ஆபத்தாக மாறியுள்ளது. தான் ஐஸ்லாந்தில் உள்ள கிரண்டாவிக், இந்த நகரை எப்போது வேண்டுமானாலும் எரிமலை வெடிக்கலாம் என்ற சூழலே நிலவுகிறது. ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் அமைந்துள்ள இந்த சின்ன ஊரில் மொத்தமே 3,000 பேர் தான் வசூலிக்கிறார்கள்.