Apr 20, 2026
Thisaigal NewsYouTube
உலகச் செய்திகள்

தொழிலாளர்கள் மறியலால் வங்காளதேசத்தில் ரயில் போக்குவரத்துச் சேவை நிறுத்தப்பட்டுள்ளது

Share:

டக்கா, ஜன.28-

வங்கதேசத்தில் கூடுதல் பணிக்கான நலன்கள் கோரி ரயில்வே ஊழியர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், அந்நாட்டில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலைய ஊழியர்களுக்கு மேலதிக நேர சம்பளம் மற்றும் ஓய்வூதிய பலன்களை வழங்கக் கோரியே இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அச்சங்கம் திங்கள்கிழமை வரை அதிகாரிகளுக்கு கால அவகாசம் அளித்துள்ளது.

100க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு இடையேயான சேவைகள் மற்றும் வங்கதேச ரயில்வேயால் இயக்கப்படும் 30க்கும் மேற்பட்ட சரக்கு ரயில்கள் உட்பட சுமார் 400 ரயில்களின் இயக்கம் இந்த வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்களில் தினமும் சுமார் 250,000 பயணிகள் பயணம் செய்கின்றனர்.

இதற்கிடையில், வங்காளதேச ரயில்வே அமைச்சகம், ரயில் பயணிகள் செவ்வாய்க்கிழமை முதல் சில முக்கியமான ரயில் பாதைகளில் பேருந்து சேவைகளில் தங்கள் முன் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. சேவையைப் பயன்படுத்துவோரின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் வேலை நிறுத்தத்தை உடனடியாக நிறுத்துமாறும் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

Related News

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு