யூட்டா, செப்டம்பர்.12-
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளரான 31 வயதான சார்லி கிர்க் நேற்று பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வலதுசாரி அரசியல் சிந்தனையாளரும், எழுத்தாளருமாகிய சார்லி கிர்க் அமெரிக்கர்களிடம் தனது தனித்துவமான நிகழ்ச்சிகளின் மூலம் நன்கு அறியப்பட்டவர். டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரான அவர் அமெரிக்காவின் 47-வது அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி மற்றும் டிரம்புக்கு ஆதரவாக முழுமையாகப் பிரசாரம் செய்திருந்தார்.
இந்நிலையில், யூட்டா மாகாண பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, மர்ம நபர் ஒருவர் அவரைச் சுட்டதில் கழுத்தில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். சார்லி கிர்க் சுடப்பட்ட காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.