ஒட்டாவா: இந்தியா கனடா இடையே மோதல் தொடரும் நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ தரப்பில் இருந்து வரும் அறிவிப்புகளை நெட்டிசன்கள் வைத்துச் செய்து வருகின்றனர்.
ஒட்டாவா: இந்தியா கனடா இடையே மோதல் தொடரும் நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ தரப்பில் இருந்து வரும் அறிவிப்புகளை நெட்டிசன்கள் வைத்துச் செய்து வருகின்றனர்.
காலிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் கனடாவில் வைத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ கூறிய நிலையில் அது பெரிய சர்ச்சையானது.
இந்தியா இந்தக் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இருப்பினும், தொடர்ந்து ஆதாரம் இல்லாமல் இந்தியாவைக் கனடா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இனால் இரு தரப்பு உறவு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.
ஜஸ்டின் ட்ரூடோ: இதற்கிடையே இப்போது ஜஸ்டின் ட்ரூடோவை இணையத்தில் நெட்டிசன்கள் வைத்து செய்து வருகின்றனர். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா விவகாரம் தொடர்பாக ஒவ்வொரு உலக தலைவர்களிடமும் கால் செய்து பேசி வருவதாக இணையத்தில் நெட்டிசன்கள் வைத்துச் செய்து வருகின்றனர்.