Apr 21, 2026
Thisaigal NewsYouTube
வரலாற்றுச் சிறப்புமிக்க தாய்லாந்து-கம்போடியா அமைதி உடன்பாடு நாளை கையெழுத்தாகிறது
உலகச் செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க தாய்லாந்து-கம்போடியா அமைதி உடன்பாடு நாளை கையெழுத்தாகிறது

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.25-

கோலாலம்பூரில் தொடங்கியுள்ள 47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கு சிகரம் வைத்தது போல், வரலாற்றுச் சிறப்புமிக்க தாய்லாந்து-கம்போடியா அமைதி உடன்பாடு நாளை ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகிறது.

ஆசியானின் இரண்டு முக்கிய அண்டை நாடுகளான தாய்லாந்துக்கும், கம்போடியாவிற்கும் இடையில் நிலவி வந்த எல்லைப் பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் போர் நிறுத்தத்தில் கையெழுத்திடுவதற்கு நாளை மலேசியா வருவதாக தாய்லாந்து பிரதமர் Anutin Charnvirakul அறிவித்துள்ளார்.

இன்று அக்டோபர் 25 ஆம் தேதி மலேசியா வருவதற்கு அட்டவணையிடப்பட்டு இருந்த தாய்லாந்து பிரதமர் Anutin, அந்நாட்டின் முன்னாள் அரசியார் சிரிகிட் மறைவு காரணமாக பயணத்தை ரத்து செய்தார். எனினும் இன்று சனிக்கிழமை பிற்பகலில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, தாய்லாந்துக்கும், கம்போடியாவிற்கும் இடையிலான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு மட்டும் நாளை மலேசியா வருவதாக அறிவித்துள்ளார்.

கையெழுத்து சடங்கு முடிந்தவுடன் நாடு திரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்பாடு, ஆசியான் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஆசியான் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னிலையில் கையெழுத்திடப்படவிருக்கிறது.

ஆசியான் தலைவர் என்று முறையில் மலேசியாவின் தலையீடு, முக்கியப் பங்காற்றியதன் விளைவாக, இரு நாடுகளும் நிபந்தனையின்றி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

ஜம்மு-காஷ்மீர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

ஜம்மு-காஷ்மீர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

ஜப்பானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 3 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 3 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி எச்சரிக்கை

மகளைப் பறிகொடுத்த தாய்: சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நெஞ்சை உருக்கும் வாக்குமூலம்!

மகளைப் பறிகொடுத்த தாய்: சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நெஞ்சை உருக்கும் வாக்குமூலம்!

அமெரிக்காவில் பயங்கரம்: 8 குழந்தைகளைச் சுட்டுக் கொன்ற தந்தை!

அமெரிக்காவில் பயங்கரம்: 8 குழந்தைகளைச் சுட்டுக் கொன்ற தந்தை!

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!