Jun 17, 2026
Thisaigal NewsYouTube
இத்தாலியில் படகு கவிழ்ந்து 20 அகதிகள் உயிரிழப்பு
உலகச் செய்திகள்

இத்தாலியில் படகு கவிழ்ந்து 20 அகதிகள் உயிரிழப்பு

Share:

ரோம், ஆகஸ்ட்.14-

இத்தாலியின் லேம்பெடுசா தீவு அருகே ஆப்பிரிக்க அகதிகள் 97 பேரை ஏற்றி வந்த படகு கவிழ்ந்ததில் 20 பேர் பலியாகினர். 17 பேரைக் காணவில்லை.

ஐரோப்பிய நாடான இத்தாலியையும், வட ஆப்பிரிக்க நாடுகளையும் மத்தியத் தரைக்கடல் பகுதி இணைக்கிறது. இந்த கடல் பகுதி வழியாக ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்க மக்கள் அகதிகளாக இத்தாலிக்குப் பயணிக்கின்றனர்.

இதற்காக ஆபத்தான படகு பயணங்களை மேற்கொள்கின்றனர். இவ்வாண்டில் நேற்று வரை 38,263 பேர் இது போல் இத்தாலி கரையை அடைந்துள்ளனர். மேலும், 675 பேர் படகு கவிழ்ந்த விபத்தில் இறந்து உள்ளனர்.

இந்நிலையில், ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 97 பயணியருடன் படகு ஒன்று இத்தாலிக்கு சட்டவிரோதமாகப் புறப்பட்டது.
இது லேம் பெடுசா தீவு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஒன்றரை வயது குழந்தை உட்பட 60 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 17 பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி நடக்கிறது.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை