ஜாலாவார், ஜூலை.25-
ராஜஸ்தானில் அரசுப் பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 7 மாணவர்கள் உயிரிழந்தனர். ஜாலாவார் மாவட்டத்தில் உள்ள பிப்லோடி கிராமத்தில் செயல்பட்டு வந்த அரசுப் பள்ளி கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. அச்சம்பவத்தின் போது, சுமார் 60 முதல் 70 மாணவர்கள் பள்ளி வளாகத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அதில் 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
நீண்ட காலமாக பள்ளிக் கட்டடம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டு வந்ததாகவும், அதனைச் சீர் செய்வதற்கான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் கிராம மக்கள் குறை கூறியுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.








