ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, வெடிவிபத்தால் சேதமடைந்த வணிக வளாகத்தில் சிக்கியிருந்த 25 பூனைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன.
குமாமோட்டோ பகுதியில் ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் அங்குள்ள வணிக வளாகத்தில் அமைந்துள்ள பூனை காப்பகத்தில் இந்தப் பூனைகள் சிக்கிக் கொண்டன.
இதனையடுத்து, தீயணைப்பு மற்றும் காவல் துறையினரின் அனுமதியுடன் காப்பக மேலாளர் உள்ளே சென்று எந்தவித காயமுமின்றி அனைத்துப் பூனைகளையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.








