Jun 17, 2026
Thisaigal NewsYouTube
தாய்லாந்து காபந்து பிரதமராக Phumtham Wechayachai நியமிக்கப்படவிருக்கிறார்
உலகச் செய்திகள்

தாய்லாந்து காபந்து பிரதமராக Phumtham Wechayachai நியமிக்கப்படவிருக்கிறார்

Share:

பாங்கோக், ஜூலை.02-

தாய்லாந்தின் துணைப்பிரதமரும், உள்துறை அமைச்சருமான Phumtham Wechayachai அந்நாட்டின் காபந்து பிரதமராக நியமிக்கப்படவிருக்கிறார்.

நாளை வியாழக்கிழமை நடைபெறவிருக்கும் சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு காபந்து பிரதமராக Phumtham Wechayachai பதவி உறுதி மொழி எடுத்துக் கொள்வார் என்று அந்நாட்டின் இரண்டாவது துணைப்பிரதமர் Suriya Juangroongruangkit உறுதிப்படுத்தினார்.

தாய்லாந்து பிரதமராகப் பொறுப்பு வகித்து வந்த 38 வயது Paetongtarn ஷினவத்ராவை அந்நாட்டின் அரசமைப்பு நீதிமன்றம், நேற்று இடை நீக்கம் செய்தது.

அண்மையில், கம்போடியாவின் முன்னாள் தலைவர் Hun Sen -னிடம் ஷினவத்ரா தொலைப்பேசியில் பேசியிருந்தார். அந்தத் தொலைபேசி உரையாடல் சமூக ஊடகத்தில் கசிந்து பெரும் சர்ச்சையாக மாறியது.

அந்த 17 நிமிடங்கள் தொலைபேசி உரையாடலில் தாய்லாந்து ராணுவத் தளபதியை தன் எதிரி என ஷினவத்ரா குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஷினவத்ரா பதவி விலகக் கோரி தாய்லாந்தில் ஆர்ப்பாட்டம் வெடித்தது.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை