Aug 13, 2026
Thisaigal NewsYouTube
தாய்லாந்து காபந்து பிரதமராக Phumtham Wechayachai நியமிக்கப்படவிருக்கிறார்
உலகச் செய்திகள்

தாய்லாந்து காபந்து பிரதமராக Phumtham Wechayachai நியமிக்கப்படவிருக்கிறார்

Share:

பாங்கோக், ஜூலை.02-

தாய்லாந்தின் துணைப்பிரதமரும், உள்துறை அமைச்சருமான Phumtham Wechayachai அந்நாட்டின் காபந்து பிரதமராக நியமிக்கப்படவிருக்கிறார்.

நாளை வியாழக்கிழமை நடைபெறவிருக்கும் சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு காபந்து பிரதமராக Phumtham Wechayachai பதவி உறுதி மொழி எடுத்துக் கொள்வார் என்று அந்நாட்டின் இரண்டாவது துணைப்பிரதமர் Suriya Juangroongruangkit உறுதிப்படுத்தினார்.

தாய்லாந்து பிரதமராகப் பொறுப்பு வகித்து வந்த 38 வயது Paetongtarn ஷினவத்ராவை அந்நாட்டின் அரசமைப்பு நீதிமன்றம், நேற்று இடை நீக்கம் செய்தது.

அண்மையில், கம்போடியாவின் முன்னாள் தலைவர் Hun Sen -னிடம் ஷினவத்ரா தொலைப்பேசியில் பேசியிருந்தார். அந்தத் தொலைபேசி உரையாடல் சமூக ஊடகத்தில் கசிந்து பெரும் சர்ச்சையாக மாறியது.

அந்த 17 நிமிடங்கள் தொலைபேசி உரையாடலில் தாய்லாந்து ராணுவத் தளபதியை தன் எதிரி என ஷினவத்ரா குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஷினவத்ரா பதவி விலகக் கோரி தாய்லாந்தில் ஆர்ப்பாட்டம் வெடித்தது.

Related News

ஆப்பிரிக்காவில் இருந்து வியட்நாமுக்கு கடத்தல்: 1.2 டன் யானைத்தந்தம் பறிமுதல்!

ஆப்பிரிக்காவில் இருந்து வியட்நாமுக்கு கடத்தல்: 1.2 டன் யானைத்தந்தம் பறிமுதல்!

இந்தோனேஷியாவில் பயங்கரமான காட்டு தீ பரவுதல் : பள்ளிகள் மூடல்

இந்தோனேஷியாவில் பயங்கரமான காட்டு தீ பரவுதல் : பள்ளிகள் மூடல்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 164 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 164 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

பாங்காக் பள்ளி துப்பாக்கிச் சூடு: குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் துப்பாக்கி பயன்பாட்டில் முன்பே ஆர்வம்

பாங்காக் பள்ளி துப்பாக்கிச் சூடு: குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் துப்பாக்கி பயன்பாட்டில் முன்பே ஆர்வம்

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்:  பணத்தை பாதுகாக்க சென்ற  2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்: பணத்தை பாதுகாக்க சென்ற 2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு