Jun 17, 2026
Thisaigal NewsYouTube
சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் குலுங்கிய கட்டடங்கள்
உலகச் செய்திகள்

சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் குலுங்கிய கட்டடங்கள்

Share:

சாண்டியாகோ, ஜூன்.07-

சிலி நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. நிலநடுக்கம் ரிக்டர் அளவையில் 6.6 ஆகப் பதிவாகியிருந்தது. சிலி மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் அண்மையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகின. இதில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து சேதமாகின. அந்த நிலநடுக்கம் 7.4 ஆக பதிவானது. உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் மீட்டுக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் சிலியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 6.6 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியதாக அமெரிக்க புவியியல் மையம் அறிவித்துள்ளது. அடகாமா பாலைவனப் பகுதி அருகே இந்த நிலநடுக்கம் பதிவானது.

நிலநடுக்கம் காரணமாக சிறிய அளவிலான கட்டடங்கள் குலுங்கின. சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. பீதி அடைந்த மக்கள் சாலைகளில் ஓடி தஞ்சம் அடைந்தனர். பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

நிலநடுக்கத்தால் ஏதேனும் பாதிப்புகள்,சேதங்கள் ஏற்பட்டதா என்ற உடனடித் தகவல்கள் வெளியாகவில்லை.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை