Oct 18, 2025
Thisaigal NewsYouTube
கடற்கரையில் மர்ம பொருள்..! சந்திரயான் 3இல் இருந்து விழுந்ததா? இணையத்தில் பரவும் படங்கள்! என்னாச்சு
உலகச் செய்திகள்

கடற்கரையில் மர்ம பொருள்..! சந்திரயான் 3இல் இருந்து விழுந்ததா? இணையத்தில் பரவும் படங்கள்! என்னாச்சு

Share:

ஆஸ்திரேலியாவில் கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று கரையொதுங்கிய நிலையில், அது சந்திரயான் 3 ராக்கெட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இந்தியாவின் லட்சிய நிலவு திட்டமான சந்திரயான் 3 விண்கலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இது இந்தியாவின் விண்வெளி துறைக்கு மிகப் பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.

இந்த சந்திரயான் 3 அடுத்த சுமார் 40 நாட்கள் விண்வெளியில் பயணித்து நிலவை அடைய உள்ளது. இதன் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் இறங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Related News