Oct 29, 2025
Thisaigal NewsYouTube
தெற்கு கரோலினாவில் துப்பாக்கிச் சூடு: 11 பேர் காயம்
உலகச் செய்திகள்

தெற்கு கரோலினாவில் துப்பாக்கிச் சூடு: 11 பேர் காயம்

Share:

தென் கரோலினா, மே.26-

தென் கரோலினாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலத்த காயம் அடைந்தனர். அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அமெரிக்காவில் தெற்கு கரோலினாவின் கடற்கரை நகரமான லிட்டல் ரிவரில், நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்தச் சம்பவத்தில் மொத்தம் 11 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மிர்ட்டல் கடற்கரையிலிருந்து வட கிழக்கே 32 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லிட்டில் ரிவரில் நடந்த இந்த சம்பவம் தொடர்பில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைத் தேடும் பணியைப் போலீசார் முடுக்கியுள்ளனர்.

Related News

தெற்கு கரோலினாவில் துப்பாக்கிச் சூடு: 11 பேர் காயம் | Thisaigal News