Aug 3, 2026
Thisaigal NewsYouTube
இந்தியாவில் ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
உலகச் செய்திகள்

இந்தியாவில் ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Share:

ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தரா மற்றும் ஆகாச நிறுவனங்களின் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில் இவ்வாறு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து,பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வருவதாக விமான நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வரும் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக விமான நிறுவனங்களுக்கு சுமார் ரூ.1000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கடந்த 2 வாரங்களில் மட்டும், சுமார் 250 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

விமானங்கள் தொடர்ந்து கண்காணிப்பட்டு வருவதாகவும், பாதுகாப்புத் துறையினருடன் கலந்துரையாடி அனைத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், விமான நிறுவனங்களுக்கு வரும் போலியான வெடிகுண்டு மிரட்டலை தடுக்க மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க பரிசீலனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Related News

லேண்டிங் கியர் கோளாறு: பிலிப்பைன்ஸில் ஏர்ஏசியா விமானம் அவசரமாக ரத்து!

லேண்டிங் கியர் கோளாறு: பிலிப்பைன்ஸில் ஏர்ஏசியா விமானம் அவசரமாக ரத்து!

பசிபிக் தீவு நாடான நவுரு தனது பாரம்பரியப் பெயரான 'நவோரோ' என அதிகாரப்பூர்வமாக மாற்றம்

பசிபிக் தீவு நாடான நவுரு தனது பாரம்பரியப் பெயரான 'நவோரோ' என அதிகாரப்பூர்வமாக மாற்றம்

யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னத்திற்கு அருகில் பயங்கரவாதச் சுரங்கங்களை அழித்த இஸ்ரேல்

யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னத்திற்கு அருகில் பயங்கரவாதச் சுரங்கங்களை அழித்த இஸ்ரேல்

அர்ஜென்டினாவுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு: வெளிநாட்டினருக்குத் தடை விதிக்க அதிபர் சவியர் மிலெய் நடவடிக்கை

அர்ஜென்டினாவுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு: வெளிநாட்டினருக்குத் தடை விதிக்க அதிபர் சவியர் மிலெய் நடவடிக்கை

'ராபின் ஹுட்' மேயர் படுகொலை வழக்கில் மூளையாகச் செயல்பட்ட முக்கியக் குற்றவாளி மெக்சிகோவில் கைது

'ராபின் ஹுட்' மேயர் படுகொலை வழக்கில் மூளையாகச் செயல்பட்ட முக்கியக் குற்றவாளி மெக்சிகோவில் கைது

இஸ்ரேலுடன் போர் முடிவுக்கு வந்தது: ஹமாஸ் அமைப்பு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியது

இஸ்ரேலுடன் போர் முடிவுக்கு வந்தது: ஹமாஸ் அமைப்பு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியது