Jun 17, 2026
Thisaigal NewsYouTube
தென் கொரியாவில் காட்டுத் தீ
உலகச் செய்திகள்

தென் கொரியாவில் காட்டுத் தீ

Share:

சியோல், மார்ச்.24-

தென் கொரியாவில் கடந்த மூன்று தினங்களாக பேரளவிலான காட்டுத் தீ பரவி வருகிறது. தீயில் இதுவரை நால்வர் பலியான வேளை, அறுவர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஐவர் படுகாயமடைந்து உள்ளதாகவும் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து கிட்டத்தட்ட 1,500 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சியோலில் இருந்து தென்கிழக்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சான்சியோங் கவுண்டியில் கடந்த வெள்ளிக்கிழமை தீ பரவத் தொடங்கியதாகவும் பின்னர் மற்ற பகுதிகளுக்கும் பரவியதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, தற்போதைய பேரிடரைக் கட்டுப்படுத்த அனைத்து வளங்களையும் பயன்படுத்துமாறு தீயணைப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரிய ஊடக அறிக்கைகளின்படி, இதுவரை சுமார் 3,286.11 ஹெக்டேர் நிலம் எரிந்துள்ளது. வடக்கு கியோங்சாங் மாவட்டத்திக் உய்சோங் மற்றும் சான்சியோனில் முறையே ஆயிரம் ஹெக்டேர் நிலம் அழிந்துள்ளது. நாட்டின் தென்கிழக்கில் நான்கு பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் பணியாற்றி வருவதாகவும் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை