Jun 17, 2026
Thisaigal NewsYouTube
இதய அறுவை சிகிச்சை செய்த போலி டாக்டர்: 7 பேர் மரணம்
உலகச் செய்திகள்

இதய அறுவை சிகிச்சை செய்த போலி டாக்டர்: 7 பேர் மரணம்

Share:

மத்தியப் பிரதேசம், ஏப்ரல்.05-

இந்தியா, மத்தியப் பிரதேசத்தில் இதய அறுவை சிகிச்சை செய்த போலி டாக்டரால் ஒரே மாதத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். ஜான் கெம் எனும் அந்த மருத்துவர் மருத்துவமனையொன்றில் இதய அறுவை சிகிச்சை செய்து வந்துள்ளார். பிரிட்டனை சேர்ந்தவர் என அவர் கூறி வந்துள்ளார். இவர், பலருக்கு இதய அறுவை சிகிச்சை செய்துள்ளார். அவர்களில் ஏழு பேர் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் மத்தியில் பயம் ஏற்பட்டது.

இது குறித்து தொடர்ந்து புகார்கள் வரவே, அந்த மருத்துவமனையில் மாவட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், அறுவை சிகிச்சை செய்தது போலி டாக்டர் என்பது தெரியவந்தது. அவரின் உண்மையான பெயர் நரேந்திர விக்ரமாதித்யா யாதவ் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டதுடன், மருத்துவமனையில் சோதனை செய்து முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். பிரிட்டனில் உள்ள டாக்டரைப் போன்றே போலி ஆவணங்களை அவர் தயார் செய்ததும், போலி டாக்டர் மீது ஐதராபாத்தில் கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளதும், அவர் பல சர்ச்சைகளில் சிக்கி உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை