Jun 22, 2026
Thisaigal NewsYouTube
அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் தப்பிப்பது எப்படி? மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ரஷ்யா.. என்ன நடக்குது
உலகச் செய்திகள்

அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் தப்பிப்பது எப்படி? மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ரஷ்யா.. என்ன நடக்குது

Share:

மாஸ்கோ: அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் தற்காத்து கொள்வது எப்படி என்று ரஷ்யா, உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு கற்று கொடுக்க திட்டமிட்டுள்ளது. உக்ரைன் இடையேயான மோதலுக்கு மத்தியில் ரஷ்யாவின் இந்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. உக்ரைனை கைப்பற்றும் நோக்கத்தில் ரஷ்யா அதிரடி தாக்குதலை தொடர்ந்தது. ஆனால், ரஷ்யாவே எதிர்பார்க்காத அளவுக்கு உக்ரைன் போரில் கடும் சவால் கொடுத்தது. இதனால், உக்ரைனை எளிதில் கைப்பற்றிவிடலாம் என்ற ரஷ்யாவின் கனவும் தவிடுபொடியானது.

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருவதால் ரஷ்யாவுக்கு சரிசமமாக உக்ரைன் மல்லுக்கட்டி வருகிறது. இதனால் ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளை கடந்தும் இன்னும் நீடித்து வருகிறது. ரஷ்யாவின் இறையாண்மையை காக்க அணு ஆயுதத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என ஒருபக்கம் ரஷ்யா கூறி வருகிறது.

ஜெர்மனியின் லீக் டாக்குமெண்ட்: இதற்கிடையே, ரஷ்ய இராணுவத்தில் சேரும் வெளிநாட்டு நபர்களுக்கு ரஷ்ய குடியுரிமை அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. இதன் மூலம் வெளிநாட்டினரையும் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்க புதின் ஆர்வமாக உள்ளது தெரிகிறது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து, குறிப்பாக ஜெர்மனியில் இருந்து கசிந்த பாதுகாப்பு ஆவணங்கள் சர்வதேச பதற்றத்தை அதிகரிப்பதாகவே இருக்கிறது.

Related News

ஈரான் - அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: அடுத்த வாரம் தொழில்நுட்ப விவாதங்களை தொடங்க சுவிட்சர்லாந்து வரவேற்பு

ஈரான் - அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: அடுத்த வாரம் தொழில்நுட்ப விவாதங்களை தொடங்க சுவிட்சர்லாந்து வரவேற்பு

கத்தாரில் உள்ள எரிவாயு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து: 54 பேர் காயம், 18 பேரைக் காணவில்லை

கத்தாரில் உள்ள எரிவாயு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து: 54 பேர் காயம், 18 பேரைக் காணவில்லை

மோசடிக் கும்பலுடன் தொடர்பு - சிங்கப்பூர் 3 மலேசியர்கள் கைது

மோசடிக் கும்பலுடன் தொடர்பு - சிங்கப்பூர் 3 மலேசியர்கள் கைது

முதலாவது வெளிநாட்டுப் பயணம்: இந்தியாவைத் தவிர்த்து மலேசியா, சீனாவைத் தேர்ந்தெடுத்தார் பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான்!

முதலாவது வெளிநாட்டுப் பயணம்: இந்தியாவைத் தவிர்த்து மலேசியா, சீனாவைத் தேர்ந்தெடுத்தார் பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான்!

லண்டனில் இரண்டு ரயில்கள் பயங்கர மோதல்: ஓட்டுநர் பலி, 89 பேர் காயம்

லண்டனில் இரண்டு ரயில்கள் பயங்கர மோதல்: ஓட்டுநர் பலி, 89 பேர் காயம்

தேசிய கீதம் பாழானது: புகைப்படக் கலைஞர்கள் மீது இங்கிலாந்து பயிற்சியாளர் தாமஸ் துச்செல் அதிருப்தி

தேசிய கீதம் பாழானது: புகைப்படக் கலைஞர்கள் மீது இங்கிலாந்து பயிற்சியாளர் தாமஸ் துச்செல் அதிருப்தி

அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் தப்பிப்பது எப்படி? மாணவர்கள... | Thisaigal News