Oct 17, 2025
Thisaigal NewsYouTube
நேபாளத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை: நிலச்சரிவில் 51 பேர் பலி
உலகச் செய்திகள்

நேபாளத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை: நிலச்சரிவில் 51 பேர் பலி

Share:

கட்மாண்டு, அக்டோபர்.05-

நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர். சாலைகள் சேதம் அடைந்ததால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. நேபாளத்தின் ஏழு பகுதிகளில் பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பின. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

சாலைகள் சேதம் அடைந்ததால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் போராடி வருகின்றனர்.

மீட்பு பணிகளுக்காக நேபாள ராணுவம் ஹெலிகாப்டரை அனுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோரை ராணுவத்தினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து இருக்கின்றனர். இருப்பினும், மோசமான வானிலை காரணமாக, தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு நடவடிக்கைகள் தடைபட்டுள்ளன. மேலும் பலர் மண்ணில் புதையுண்டதாக அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

Related News