Jun 17, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூர் விமானம் மறுபடியும் சாங்கி விமான நிலையத்திற்கே திரும்பியது
உலகச் செய்திகள்

சிங்கப்பூர் விமானம் மறுபடியும் சாங்கி விமான நிலையத்திற்கே திரும்பியது

Share:

சிங்கப்பூர், ஆகஸ்ட்.04-

தென் கொரியா தலைநகர் சோலுக்குப் புறப்பட்ட சிங்கப்பூர் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் சாங்கி விமான நிலையத்திற்கே திரும்பியது.

இச்சம்பவம் இன்று காலை 9.55 மணியளவில் நிகழ்ந்தது. SQ600 என்ற அந்த விமானம் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்திலிருந்து காலை 8.15 மணியளவில் சோலுக்குப் புறப்பட்டது.

அந்த போயிங் 787-10 ரக விமானம், சோலில் பிற்பகல் 3.30 மணிக்கு தலையிறங்குவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் விமானத்தை சாங்கி விமான நிலையத்திற்கே திருப்புவதற்கு விமானி முடிவெடுத்தார்.

விமானம், மலேசிய வான் போக்குவரத்துப் பாதையிலிருந்து சிங்கப்பூருக்குத் திரும்புவதை விமானப் பயணங்களைக் காட்டும் ஃபிளைட் அவேர் தரவில் தெரிய வந்துள்ளது.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை