Apr 21, 2026
Thisaigal NewsYouTube
டில்லி கார் குண்டு வெடிப்பில் தொடர்பு: பாகிஸ்தான் அரசியல்வாதி ஒப்புதல்
உலகச் செய்திகள்

டில்லி கார் குண்டு வெடிப்பில் தொடர்பு: பாகிஸ்தான் அரசியல்வாதி ஒப்புதல்

Share:

இஸ்லாமாபாத், நவம்பர்.20-

டில்லி செங்கோட்டையில் நடந்த கார் குண்டுவெடிப்பில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு உள்ளது என அந்நாட்டு அரசியல்வாதி ஒருவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துக்குப் பதிலடியாக இந்தியா 'ஆப்பரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு பழிவாங்க வேண்டும் என ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு சதித்திட்டம் தீட்டியதை உளவுத்துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக இந்தியாவில் மக்கள் அதிகம் கூடும் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகளின் சதி முறியடிக்கப்பட்டது.

கடந்த 10ம் தேதி டில்லியில் செங்கோட்டையில் சிக்னல் அருகே கார் வெடிகுண்டு வெடித்ததில் 15 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அதில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தொடர்பு இருப்பது, ஹமாஸ் பாணியில் டிரோன் தாக்குதல் நடத்த திட்டமிட்டது உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கும் தொடர்பு உள்ளதாக அந்நாட்டு அரசியல்வாதி ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

Related News

ஜம்மு-காஷ்மீர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

ஜம்மு-காஷ்மீர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

ஜப்பானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 3 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 3 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி எச்சரிக்கை

மகளைப் பறிகொடுத்த தாய்: சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நெஞ்சை உருக்கும் வாக்குமூலம்!

மகளைப் பறிகொடுத்த தாய்: சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நெஞ்சை உருக்கும் வாக்குமூலம்!

அமெரிக்காவில் பயங்கரம்: 8 குழந்தைகளைச் சுட்டுக் கொன்ற தந்தை!

அமெரிக்காவில் பயங்கரம்: 8 குழந்தைகளைச் சுட்டுக் கொன்ற தந்தை!

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!