இஸ்லாமாபாத், நவம்பர்.20-
டில்லி செங்கோட்டையில் நடந்த கார் குண்டுவெடிப்பில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு உள்ளது என அந்நாட்டு அரசியல்வாதி ஒருவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துக்குப் பதிலடியாக இந்தியா 'ஆப்பரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு பழிவாங்க வேண்டும் என ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு சதித்திட்டம் தீட்டியதை உளவுத்துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக இந்தியாவில் மக்கள் அதிகம் கூடும் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகளின் சதி முறியடிக்கப்பட்டது.
கடந்த 10ம் தேதி டில்லியில் செங்கோட்டையில் சிக்னல் அருகே கார் வெடிகுண்டு வெடித்ததில் 15 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அதில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தொடர்பு இருப்பது, ஹமாஸ் பாணியில் டிரோன் தாக்குதல் நடத்த திட்டமிட்டது உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கும் தொடர்பு உள்ளதாக அந்நாட்டு அரசியல்வாதி ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார்.








