Apr 19, 2026
Thisaigal NewsYouTube
ஐஎஸ்ஐஎஸ் ஆயுத குழுவின் தாக்குதலை முறியடித்த இஸ்ரேலிய பாதுகாப்பு படை
உலகச் செய்திகள்

ஐஎஸ்ஐஎஸ் ஆயுத குழுவின் தாக்குதலை முறியடித்த இஸ்ரேலிய பாதுகாப்பு படை

Share:

இஸ்ரேல் - தலைநகர் டெல் அவிவில் ஐஎஸ்ஐஎஸ் ஆயுத குழுவால் மேற்கொள்ளப்படவிருந்த வெடிகுண்டு தாக்குதலை அந்நாட்டு பாதுகாப்பு படை முறியடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

டெல் அவிவில் உள்ள வர்த்தகமையம் ஒன்றை இலக்குவைத்தே இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்ததாக இஸ்ரேலிய பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பொலிஸார் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு முகமை (ISA) பிரிவு வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

https://twitter.com/i/status/1844302991123415334

டெல் அவிவ் நகரின் வடக்கே மற்றும் மேற்குக் கரைக்கு அருகாமையில் உள்ள தாயிபே(Tayibe) நகரில் வசித்த ஐந்து பேர் பல வாரங்களாக தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒரு மாத கால இரகசிய விசாரணையின் பின்னர் இருவர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் ஏனைய மூவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் தொடர் விசாரணைகளில் குறித்த ஐந்து பெரும் ஐஎஸ்ஐஎஸ் ஆயுத குழு உறுப்பினர்கள் என கண்டறியப்பட்டதாக இஸ்ரேல் தரப்பு கூறியுள்ளது.

இஸ்ரேல் பொலிஸார்

கைது நடவடிக்கையின் போது இஸ்ரேல் பொலிஸாரால் பகிரப்பட்ட காணொளியில், இராணுவத்தினர் வீட்டினுள் புகுந்து மூன்று பேரை கைது செய்ததைக் காட்டுகிறது.

எனினும் இந்த கைது நடவடிக்கைக்கு ஐஎஸ்ஐஎஸ் இதுவரை பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Related News

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு