Jul 28, 2026
Thisaigal NewsYouTube
டிட்வா புயலில் சிக்குண்ட இலங்கைக்கு சீனா 10 லட்சம் டாலர் நிதி உதவி
உலகச் செய்திகள்

டிட்வா புயலில் சிக்குண்ட இலங்கைக்கு சீனா 10 லட்சம் டாலர் நிதி உதவி

Share:

கொழும்பு, டிசம்பர்.02-

டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு சீனா 10 லட்சம் அமெரிக்க டாலர்களை நிதியாக அளித்து உதவி செய்திருக்கிறது.

இலங்கை வரலாறு காணாத பொருள் இழப்பையும்,உயிரிழப்பையும் டிட்வா புயலால் சந்தித்துள்ளது. புயல், மழைக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளது. 350க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர்.

கிட்டத்தட்ட 2 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடும் சேதத்தை சந்தித்துள்ள இலங்கைக்கு சீனா கை கொடுத்துள்ளது. அந்நாட்டு தரப்பில் நிதியாக 10 லட்சம் டாலர்களை அளித்துள்ளது. இந்த நிதியை இலங்கையில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் சீனா வழங்கி உள்ளது.

முன்னதாக, இந்தியாவின் தரப்பில் இருந்தும் மனிதாபிமானம் அடிப்படையில் இலங்கைக்கு 10 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. மேலும், அங்கு நடைபெறும் மீட்புப் பணிகளில் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட தேசிய பேரிடர் மீட்புப் படையும் ஈடுபட்டுள்ளது.

Related News

கல்வி அமைச்சர் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய போராட்டத்தைத் தொடங்கிய இந்தியாவின் 'கரப்பான் பூச்சி' கட்சி

கல்வி அமைச்சர் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய போராட்டத்தைத் தொடங்கிய இந்தியாவின் 'கரப்பான் பூச்சி' கட்சி

ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கம்: மேலும் ஆறு கப்பல்களை வழிமறித்து தடுத்தது ஈரான் கடற்படை

ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கம்: மேலும் ஆறு கப்பல்களை வழிமறித்து தடுத்தது ஈரான் கடற்படை

சியாட்டில் அருகே நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு: இருவர் பலி மற்றும் நால்வர் காயம்

சியாட்டில் அருகே நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு: இருவர் பலி மற்றும் நால்வர் காயம்

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் வரலாறு காணாத காட்டுத் தீ: கடும் வெப்பத்தால் தீவிரமடையும் நெருக்கடி

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் வரலாறு காணாத காட்டுத் தீ: கடும் வெப்பத்தால் தீவிரமடையும் நெருக்கடி

அணு ஆயுத நீக்கக் கோரிக்கை: ஆசியான் அமைப்புக்கு கிம் ஜாங் உன் சகோதரி கடும் கண்டனம்

அணு ஆயுத நீக்கக் கோரிக்கை: ஆசியான் அமைப்புக்கு கிம் ஜாங் உன் சகோதரி கடும் கண்டனம்

இந்தியாவில் தொடர் மாணவர் போராட்டங்களால் கல்வி அமைச்சர் ராஜிநாமா

இந்தியாவில் தொடர் மாணவர் போராட்டங்களால் கல்வி அமைச்சர் ராஜிநாமா