Jun 17, 2026
Thisaigal NewsYouTube
குஜராத்தில் பாலம் இடிந்ததில் 15 பேர் பலி: ஆற்றில் விழுந்த லாரி, கார்கள்
உலகச் செய்திகள்

குஜராத்தில் பாலம் இடிந்ததில் 15 பேர் பலி: ஆற்றில் விழுந்த லாரி, கார்கள்

Share:

குஜராத், ஜூலை.10-

இந்தியா, குஜராத்தில் பாலம் இடிந்து ஆற்றில் விழுந்ததில் உயிரிழந்தர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று புதன்கிழமை நடந்த இச்சம்பவத்தில் 43 ஆண்டு கால பழமை வாய்ந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த லாரிகள், கார்கள் ஆற்றில் விழுந்தன. மீட்புப் பணிகள் கடந்த இரண்டு நாட்களாக முழு வீச்சில் நடந்து வருகிறது.

குஜராத் நெடுஞ்சாலையில் கம்பீரா என்ற பாலம், மஹிசாகர் என்ற ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ளது. நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. வதோதரா மற்றும் ஆனந்த் மாவட்டங்களை இந்தப் பாலம் இணைக்கிறது.

இந்நிலையில் கம்பீரா பாலம் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. பாலத்தின் ஒரு பகுதி அப்படியே ஆற்றில் விழ, அப்போது வந்து கொண்டிருந்த 2 லாரிகள், 2 வேன்கள் உள்பட 6 வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்தன.

விபத்தில் முதல் கட்டமாக 10 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை