அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இதில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குடியரசு கட்சி தலைவராக குடியரசு கட்சியின் சார்பாக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது திடீர் திருப்பமாக குடியரசு கட்சியின் சார்பில் மைக் பென்ஸ் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்தபோது மைக் பென்ஸ் துணை அதிபராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குடியரசு கட்சியின் சார்பில் ட்ரம்ப் மற்றும் மைக் பென்ஸ் ஆகிய இருவருமே களத்தில் இறங்கி உள்ளதை அடுத்து இருவரில் யாருக்கு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில் தற்போதைய அதிபர் ஆன ஜோ பைடன் 2024 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதி என்றே கூறப்பட்டு வருகிறது.

Related News

சிங்கப்பூரில் 'ஏஐ' திறன்களை மேம்படுத்த ஓப்பன்ஏஐ நிறுவனம் $300 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு!

தென்கொரியாவின் தடைசெய்யப்பட்ட மலைப்பகுதியில் சிக்கிய சிங்கப்பூர் ஆடவர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு: சட்டவிரோதமாக நுழைந்ததற்காக விசாரணை

உள்ளாடைகளுக்குள் குரங்குகளை மறைத்துக் கடத்திய இருவர் கொலம்பியாவில் கைது!

ரஷ்யாவில் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய மாணவர்கள் 4 பேர் காயம்

மோசமான வானிலை: தோக்கியோவிலுள்ள மலேசியத் தூதரகம் பயணிகளுக்கு எச்சரிக்கை


